முஸ்லிம்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்- முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை (11 மார்ச் 2023): இஸ்லாமியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முஸ்லிம்களுக்கும் திராவிட அரசியலுக்கும் உள்ள உறவை யாராலும் உடைக்க முடியாது. அப்பாவி முஸ்லீம்களை விசாரணையின்றி பத்து இருபது வருடங்கள் சிறையில் அடைக்கும்…

மேலும்...

அம்பேத்கரை அடையாளப்படுத்தியது முஸ்லிம்லீக் தான் : முன்னாள் எம்.பி பேச்சு!

ரியாத் (17 டிச 2022): காயிதே மில்லத் பேரவை ரியாத் சார்பாக சந்திப்போம் சங்கமிப்போம் என்கிற நிகழ்ச்சி க்ளாஸிக் அரங்கில் வெள்ளிக்கிழமை (16 டிசம்பர் 2022) நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரும் மக்களவை முன்னாள் உறுப்பினர் M. அப்துல்ரஹ்மான் சிறப்புரையாற்றிய இந்நிகழ்வுக்கு பேரவையின் தலைவர் சுலைமான் ஃபைஜி தலைமை தாங்க, பொதுச்செயலாளர் லால்பேட்டை நாஸர் தொகுத்து வழங்கினார். “கலிமா” ஷாகுல்ஹமீது; கேஎம்சிசி முஸ்தஃபா, இந்தியன் வெல்பேர் ஃபாரம் ஜாகிர், சவூதி திமுக மருத்துவர் சந்தோஷ் ஆகியோர்…

மேலும்...

தவறான செய்திக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மோடியை பாராட்டியதாக தவறான தகவல் வெளியிட்டதற்காக இந்நேரம் டாட் காம் மன்னிப்புக் கோரி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. வேறொரு தளத்தில் வந்த செய்தியை சோர்சாக வைத்து இந்த செய்தி வெளியிடப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் செய்தியில் முழு விவரம் அறிய தந்ததற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு நன்றி. inneram

மேலும்...

காதர் மொய்தீன் மீது பொய்யான பரப்புரை – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் குறித்து பொய்யான பரப்புரை வந்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி-யின் தேசிய தலைவர் K.M.காதர் முகைதீன் அவர்கள் ஜி-20 மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அதை அறிந்த சில நபர்கள் தவறான செய்தியை சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த செய்தியை யாரும்…

மேலும்...

காங்கிரஸ் மீது முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (10 டிச 2022): “மாநிலங்களவையில் பொதுசிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இல்லை” என்று முஸ்லிம் லீக் எம்பி பி.வி அப்துல் வஹாப் குற்றம் சாட்டியுள்ளார். “தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் இல்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போல் தேசிய அளவில் எதிர்க்கட்சி வரிசையில் ஒற்றுமை இல்லை.” என்று அப்துல் வஹாப் தெரிவித்தார். மேலும் ராஜ்யசபாவில் அமலாக்க சட்டம் குறித்த தனியார் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் உறுப்பினர்கள்…

மேலும்...

மகளிர் லீக்கின் (முஸ்லிம் லீக்)தேசிய தலைவராக பாத்திமா முசாபர் தேர்வு!

சென்னை (05 நவ 2021): மகளிர் லீக்கின் தேசிய தலைவராக பாத்திமா முசாபர் (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் லீக்கின் தேசிய ஆலோசனைக் குழு மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சட்டப் பட்டம் மற்றும் இஸ்லாமியப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற பாத்திமா முசாஃபர் சிறந்த பேச்சாளர் மற்றும் அமைப்பாளர். முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், தமிழ்நாடு வக்பு வாரியம், முஸ்லீம் மகளிர் உதவி சங்கம், முஸ்லிம் பெண்கள் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்….

மேலும்...

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

திருவனந்தபுரம் (14 மார்ச் 2021): கேரளாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேர்தலில் போட்டியிடப் பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. . 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 92 இடங்களில் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக 25 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை இந்தியன் யூனியன்…

மேலும்...

முஸ்லிம்லீக் எம்பி குஞ்சாலி குட்டி திடீர் ராஜினாமா!

புதுடெல்லி (03 பிப் 2021): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி பி.கே.குஞ்சாலிக்குட்டி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கேரள மாநிலம் எம்பியான குஞ்சாலி குட்டி எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இந்த ராஜினாமாவை செய்துள்ளார். முஸ்லிம் லீக் தலைமையின் முடிவின்படி அவர் ராஜினாமா செய்துள்ளதாக குஞ்சாலி குட்டி தெரிவித்துள்ளார். குஞ்சாலி குட்டி தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார். குஞ்சாலி குட்டி ராஜினாமாவை அடுத்து, தற்போது இ.டி. முகமது பஷீர்…

மேலும்...

சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்!

திருச்சி (19 அக் 2020): தமிழகத்தில் சட்டமன்ற பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தார். திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை மாலை அரிஸ்டோ மஹாலில் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ.எம். முஹம்மது…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல – தலைமை செயலருக்கு முஸ்லிம் லீக் பதிலடி!

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம்லீக், தலைமை செயலருக்கு கோரிக்கை வைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்திருந்தார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய…

மேலும்...