கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு – கெஜ்ரிவால் அரசு அனுமதி!

புதுடெல்லி (29 பிப் 2020): ஜேஎன்யூ முன்னாள் மாணவ தலைவர் கண்ணையா குமார் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசுக்கு போலீஸ் தரப்பு டெல்லி அரசுக்கு அனுமதி கோரியிருந்தது. இதனை ஏற்று கொண்ட டில்லி…

மேலும்...

சாமியாரான மாணவர் பாலியல் வழக்கில் கைது!

புதுடெல்லி (09 பிப் 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர் ராகவேந்திர மிஸ்ரா என்ற இளம் சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார். ஜே.என்.யூவில் சமஸ்கிருத பாடத்தில் பி ஹெச் டி பயிலும் ராகவேந்திர மிஸ்ரா, மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்துத்வா சிந்தனை கொண்ட ராகவேந்திர மிஸ்ரா, ஜே.என்.யூவில் முஸ்லிம் மாணவர்களுக்கு…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர் ஷார்ஜில் இமாம் கைது!

பாட்னா (28 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜே.என்.யு மாணவர் ஷர்ஜில் இமாம் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்று பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு…

மேலும்...

நடிகை தீபிகா படுகோனுக்கு பாபா ராம்தேவ் அட்வைஸ்!

புதுடெல்லி (17 ஜன 2020): “என்னிடம் நடிகை தீபிகா படுகோன் ஆலோசனை பெற்றால் அவருக்கு எந்த பிரச்சனையும் வராது என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள்மீது இரவு நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் தீபிகா படுகோனுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வரும்…

மேலும்...

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட பெண் யார் என்பது தெரிந்தது!

புதுடெல்லி (13 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் ஏபிவிபியை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 5 ம் தேதி டில்லி ஜே.என்யு.,வில் முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார், முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களைக் கொண்டு…

மேலும்...

கேள்விகளால் பாஜக தலைவரை பிழிந்தெடுத்த கன்னையா குமார் – வீடியோ!

புதுடெல்லி (11 ஜன 2020): ஜே.என்.யூ தாக்குதல் தொடர்பான விவாத மேடையில் பாஜக தலைவரை அலற விட்டுள்ளார் கன்னையா குமார். சமீபத்தில் இந்துத்வா அமைப்பினரால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கொடூரமாக தாக்கப் பட்டனர். இவ்விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா டிவி நடத்திய விவாதம் ஒன்றில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் சங்க தலைவரும் தற்போதைய சிபிஎம் தலைவருமான கன்னையா குமார் மற்றும் பாஜக தலைவர் அமிதாப் சின்ஹா ஆகியோர்…

மேலும்...

டெல்லியில் மீண்டும் பதற்றம் – ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் – வீடியோ!

புதுடெல்லி (09 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் கொடூரமாக கையாண்டு கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 5ம் தேதியன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்துத்துவா…

மேலும்...

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக பழி வாங்கப்படுகிறாரா தீபிகா படுகோன்?

மும்பை (09 ஜன 2020): தீபிகா படுகோன் நடித்த சபாக் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் சபாக். ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சமீபத்தில் தனது ட்ரைலரினை வெளியிட்டது. மேலும் இத்திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக…

மேலும்...

தீபிகா படுகோன் படத்திற்கு இலவச விளம்பரம் செய்யும் பாஜக!

மும்பை (09 ஜன 2020): நடிகை தீபிகா படுகோன் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோன் போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீபிகா படுகோன் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் தாஜேந்தர் பால் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக எதை எதிர்த்தாலும் அது விளம்பரமாக அமைந்து எதிர் தரப்புக்கு…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த எதிர் பாராத ஆதரவு – வீடியோ!

புதுடெல்லி (08 ஜன 2020): ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே ஆதரவளித்துள்ளார். ஜேஎன்யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட முகமூடி அணிந்திருந்த மர்ம கும்பலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தக் கூட்டதத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் சீதாராம் யெச்சூரி, கண்ணையா குமார், டி. ராஜா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதவிர பாலிவுட் நடிகை தீபிகா…

மேலும்...