கொரோனா வைரஸ் லாக்டவுன்: நூற்றுக் கணக்கானோருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக தலைவர்!

பெங்களூரு (11 ஏப் 2020): உலகமே கொரோனாவால் திண்டாடிக் கொண்டிருக்க எதைப் பற்றியும கவலைப்படாமல் தனது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டடியுள்ளார் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. ஜெயராம். தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதனால் மத பிரார்த்தனைக் கூட்டங்களைக்கூட அனைத்து…

மேலும்...

கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் மரணம்!

பெங்களூரு (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மொஹம்மது ஹூசைன் சித்திக் சிகிச்சைப் பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த மொஹம்மது ஹூசைன், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது சளி மாதிரி பெங்களூருவில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா அரசும் உறுதி செய்துள்ளது….

மேலும்...

கர்நாடகம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பேர் விபத்தில் பலி!

கிருஷ்ணகிரி (06 மார்ச் 2020): கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பக்தர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயில் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது….

மேலும்...

ரஜினிக்கு சீமான் திடீர் ஆதரவு!

சென்னை (27 பிப் 2020): ரஜினி கர்நாடகாவில் கட்சி தொடங்கினால் ஆதரவளிப்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்து பல மாதங்கள் ஆனாலும் இன்னும் கட்சி தொடங்கவில்லை. எனினும் அவ்வப்போது ஏதாவது சொல்லி சிக்கலில் சிக்கிக் கொள்வது வாடிக்கை. சமீப காலமாக ரஜினியை சீமான் அதிகமாக விமர்சித்து வந்தார். தற்போது சற்று அதனை தவிர்த்துவ் வருகிறார். மேலும் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து இணையதள பாசறை நாம் தமிழர் கட்சியினருடன்…

மேலும்...

முஸ்லிம்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் – பாஜக எச்சரிக்கை!

புதுடெல்லி (08 பிப் 2020): முஸ்லிம்கள் அவர்களது ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் முஸ்லிம் பெண்கள் கையில் வாக்காளர் அட்டையுடன் நிற்கும் வீடியோவை பதிவிட்டு, ‘நீங்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் இது மீண்டும் தேவைப்படும்’ என்பதாக வெறுப்பூட்டும் பதிவை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது. நாடெங்கும் சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பி ஆகியவற்றிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்…

மேலும்...

கர்நாடகாவில் தமிழர்களுக்கு ஆபத்து!

பெங்களூரு (07 பிப் 2020): பெங்களூரு (07 பிப் 2020): கர்நாடகாவில் பணிபுரியும் தமிழர்களின் வேலைக்கு ஆபத்து வந்துள்ளது. கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் உட்பட பல துறை சார்ந்த தொழில்களிலும், 75 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வகை செய்யும், வகையிலான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ‘கர்நாடக தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில்கள், கூட்டாண்மை சட்டம்’ என்ற பெயரில் எடியூரப்பா அரசு இந்த…

மேலும்...

குடியுரிமை சட்டம் தொடர்பான நாடகம் – பள்ளி தலைமை ஆசிரியை கைது!

பெங்களூரு (01 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை விமர்சித்து பள்ளி விழாவில் நிகழ்த்தப்பட்ட நாடகம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில், பிடார் மாவட்டத்தில் உள்ள, ஷாஹீன் பள்ளியில், நடந்த விழாவில் கடந்த மாதம், 21 ல் மாணவர்களின் நாடகம் நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விமர்சிக்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, நீலேஷ் ரக் ஷயால் என்பவர், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன், ஷாஹீன்…

மேலும்...

ஆண்டுவிழா நாடகம் போட்ட பள்ளிக்கூடம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!

பெங்களூரு (29 ஜன 2020): பள்ளி ஆண்டு விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நகைச்சுவை நாடகம் போட்ட பள்ளி நிர்வாகம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4 ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக…

மேலும்...

தவறான வாட்ஸ் அப் மெஸேஜால் தரை மட்டமாக்கப் பட்ட 300 முஸ்லிம் வீடுகள்!

பெங்களூரு (21 ஜன 2020): கர்நாடகாவில் பாஜக குழுமத்தில் வெளியான தவறான வாட்ஸ் அப் மெஸேஜால் 300 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. பெங்களூரில் பொலந்தூர் ஏரி அருகே வசித்த சுமார் 300 முஸ்லிம் வீடுகள்தான் இடிக்கப் பட்டுள்ளன. திருத்தப் பட்ட குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு . நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பெங்களூர்…

மேலும்...

பல லட்சம் மக்கள் பங்கேற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்!

மங்களூரு (17 ஜன 2020): மங்களூரில் பல லட்சம் மக்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள அடயார் கன்னூர் மைதானத்தில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடி குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின் பாக்க்கில்…

மேலும்...