குவைத்தில் கூகுள் பே சேவை!

குவைத் (25 ஜன 2023) குவைத்தில் கூகுள் பே சேவை தொடங்கப்படவுள்ளது. குவைத் மத்திய வங்கியின் தேவையான ஆய்வுகள் முடிந்த பிறகு நாட்டில் கூகுள் பே சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டின் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை விரைவாகச் செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பே மார்ச் மாதத்திற்குள் குவைத்தில் செயல்படத் தொடங்கும் என்று உள்ளூர் ஊடகமான அல் ராய் செய்தி வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக, கூகுள் பே சேவை மூன்று வங்கிகளில்…

மேலும்...

குவைத்தில் பால் விலை உயர்கிறதா? – அமைச்சகம் விளக்கம்!

குவைத் (09 ஜன 2023): குவைத்தில் பால் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், சந்தையில் விலையை சரிபார்க்க தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பால் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும், பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தை அல் மராய் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என குவைத் கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அல் மராய் நிறுவனம் விண்ணப்பம் செய்தால் அமைச்சகம் அதனை…

மேலும்...

குவைத்தில் புத்தாண்டில் பாரம்பரியத்துக்கு பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை!

குவைத் (29 டிச 2022): புத்தாண்டை முன்னிட்டு குவைத்தில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்குப் பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை பிடிக்க சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய மையங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். தெருக்கள், சந்தைகள் போன்றவற்றில் மக்களைக் கண்காணிக்க சீருடை மற்றும் மஃப்டியில் 8,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,…

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரிலும் தடை!

தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் காட்டுவதால் படத்தை தடை செய்ய குவைத் அரசு முடிவு செய்தது. இந்நிலையில் கத்தாரிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படமும் கத்தார், குவைத், ஐக்கிய அரபு…

மேலும்...

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு குவைத்தில் தடை!

குவைத் (05 ஏப் 2022): விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு சில நாட்களே உள்ள நிலையில், குவைத் அரசாங்கம் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படம், பணயக்கைதிகள் திரில்லர். குவைத்தின் நலன்களுக்கு எதிரான முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல்  பீஸ்ட் திரைப்படம் காட்டுவதால். படத்தை தடை செய்ய அரசு முடிவு செய்தது. முன்னதாக, துல்கர் சல்மானின் குருப் மற்றும் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படங்களும் அங்கு தடை செய்யப்பட்டன. பீஸ்ட் திரைப்படம்…

மேலும்...

ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் முக்கிய உணவு கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை!

குவைத் (10 மார்ச் 2022): ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் உள்ள முக்கிய உணவுச் சந்தையான முபாரக் சந்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர். ரம்ஜான் மாதத்தில் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. இதன் ஒரு கட்டமாக குவைத்தின் பாரம்பரிய வர்த்தக மையமான முபாரக் சந்தையை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு வந்த அதிகாரிகள் குழு இறைச்சிக் கடைகளை ஆய்வு செய்து, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலை…

மேலும்...

இந்தியாவில் ஹிஜாப் தடை – களமிறங்கிய குவைத் – இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

குவைத் (18 பிப் 2020): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக குவைத் பெண்கள் குழுக்களும் அரசியல்வாதிகளும் களமிறங்கியுள்ளனர். ஹிஜாப் தடைக்கு எதிராக இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரீன் தீவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்முறைகள் குறித்து சர்வதேச சமூகம் மௌனம்…

மேலும்...

குவைத்தில் பல்வேறு நாடுகளுக்கு மீண்டும் விமான தடை!

குவைத் (28 நவ 2021): குவைத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து நுழைய தடை விதிக்கும் வகையில் முன்பு நடைமுறையில் இருந்த சிவப்பு பட்டியல் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வேரியன்ட் (ஒமிக்ரான்) பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், லெசோதோ, ஸ்வதானி, ஜாம்பியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும்…

மேலும்...

குவைத்தில் அதிகரிக்கும் வெளிநாட்டவர்களின் தற்கொலைகள்!

குவைத் (17 நவ 2021): குவைத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது. டந்த பத்து மாதங்களில் நாட்டில் 120 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகள் ஏன் அதிகரித்து வருகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், குவைத்தில் 90 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு பத்து மாதங்களுக்குள் அது 120ஐ எட்டியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 12 பேர்…

மேலும்...

குவைத் மசூதிகளில் தொழுகையில் சமூக இடைவெளிக்கு விலக்கு!

குவைத் (22 அக் 2021): குவைத் மசூதிகளில் தொழுகையில் தோளோடு தோள் நின்று தொழ வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவைத்தில் கொரோனா பரவலிலிருந்து ஓரளவுக்குக் கட்டுக்குள் உள்ள நிலையில், படிப்படியாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, தொழுகைகளில் இருந்து மசூதிகளில் சமூக தூரத் தேவையை விலக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல், ,தொழுகையின்போது ஒவ்வொரு விசுவாசிக்கும் இடையே ஒன்றரை மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற…

மேலும்...