சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 15ஆம் தேதியை சர்வதேச இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரான நாளாகக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய வெறுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறுபான்மையினருக்கு எதிரான இழிவான…

மேலும்...

முஸ்லிம்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்- முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை (11 மார்ச் 2023): இஸ்லாமியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முஸ்லிம்களுக்கும் திராவிட அரசியலுக்கும் உள்ள உறவை யாராலும் உடைக்க முடியாது. அப்பாவி முஸ்லீம்களை விசாரணையின்றி பத்து இருபது வருடங்கள் சிறையில் அடைக்கும்…

மேலும்...

அடுத்த பிரதம வேட்பாளராகும் முதல்வர் ஸ்டாலின் – தேசிய அரசியலில் பரபரப்பு!

சென்னை (02 மார்ச் 2023): இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவில் உள்ள முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஸடாலினை வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சியின்…

மேலும்...

மசூதிகள் பராமரிப்பு நிதி ரூ 10 கோடியாக உயர்வு – முதல்வர் ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா நன்றி!

சென்னை (14 ஜன 2023): பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை 10 கோடியாக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய தீர்மானத்தில் நான் பேசியபோது தமிழ்நாடு வக்ஃபு வாரியம் வழியாக தமிழ்நாடு பள்ளிவாசல்களுக்கு வழங்கக்கூடிய Major Repair Grant (MRG) நிதியை அதிகரித்து தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை…

மேலும்...

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை – முதல்வர் கூட்டத்தில் ஆலோசனை!

சென்னை (22 டிச 2022): கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது. உலகளவில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...

முதல்வர் ஸ்டாலின் பயணித்த சொகுசு ரெயில் பெட்டி – கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சென்னை (08 டிச 2022):: தென்காசி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்யும் சொகுசுகள் நிறைந்த ரயில் பெட்டி கவனம் ஈர்த்துள்ளது. தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தென்காசி மாவட்டம் உதயமான பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பங்கேற்கும் அரசு விழா நடைபெறுகிறது. தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

மேலும்...

தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை – ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (30 ஆக 2022): தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 21 துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஸ்டாலின் பேசிய ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்த பின் 19 பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது….

மேலும்...

எடப்பாடி புலம்பல் – தங்கம் தென்னரசு பதில்!

புதுடெல்லி (02 ஏப் 2022): துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள்கள் பயணமாக டெல்லி கிளம்பிச் சென்றார். ஏப்ரல் 2ஆம் தேதி இன்று திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடி , ஒன்றிய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என பலருக்கும் கொடுத்து விழாவுக்கு வரவேற்றுள்ளார். முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்து பேசியது போல் டெல்லி பயணத்தையும்…

மேலும்...

லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு – முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த பேச்சுவார்தையில் முடிவு!

துபாய் (28 மார்ச் 2022): கேரளாவைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலியின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துபாயில் நடைபெற்ற தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலி இதனைத் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை…

மேலும்...

செந்தில் பாலாஜி காட்டில் மழை!

கோவை (11 மார்ச் 2022): தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக கோவை மாவட்ட வெற்றியானது முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கிடைத்த வெற்றிக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கொண்டாடி தீர்த்துவிட்டார் அவர். இதற்கிடையில் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 40. இவர் கோவையின் 6வது…

மேலும்...