மதரஸாக்களுக்கான வருமானம் குறித்து விசாரணை நடத்த அரசு முடிவு!

லக்னோ (22 நவ 2022): உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் வருமான ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக உ.பி அரசு நடத்திய சர்வேயில் பெரும்பாலான மதரஸாக்கள் ஜகாத்தை வருமானமாக அறிவித்துள்ளன. இந்த விசாரணையின்படி1500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் எங்கிருந்து இந்த ஜகாத் (நன்கொடை) பெறுகின்றன என்பது இப்போது கண்டறியப்படும். குறிப்பாக நேபாள எல்லையில் அமைந்துள்ள உ.பி., மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில், வருமான ஆதாரம் குறித்த…

மேலும்...

முஸ்லிம் மதரஸாவில் நுழைந்து பூஜை நடத்திய இந்துத்துவா கும்பல் -வீடியோ!

பெங்களூரு (07 அக் 2022): கர்நாடக மாநிலம் பிதாரில் தசரா கொண்டாட்டத்தின் போது வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூத் கவான் மதரஸா வளாகத்திற்குள் புகுந்த இந்துத்துவா கும்பல் பூஜை நடத்தியுள்ளது. 1460 களில் கட்டப்பட்ட இந்த மதரஸா இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் மதரஸாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த மதரஸாவில் நுழைந்த கும்பல் இந்த அட்டூழியத்தை நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தில்…

மேலும்...

குறிவைக்கப்படும் மதரஸாக்கள் – அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் கண்டனம்!

புதுடெல்லி (05 செப் 2022): மதரஸாக்கள் குறி வைக்கப்படுவது குறித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் மதரஸாக்களை கணக்கெடுப்பது ஏன்? என அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. AIMPLB இன் செயற்குழு உறுப்பினர் காசிம் ரசூல் இலியாஸ் இதுகுறித்து கூறும்போது, “உத்தரப்பிரதேசம் மற்றும் அசாமில் மதரஸாக்கள் குறிவைக்கப்படுகின்றன. அஸ்ஸாமில், சில மதரஸாக்களை இடித்துவிட்டு பொதுவான பள்ளிகளாக மாற்றி வருகின்றன. மதக் கல்வியைக் கட்டுப்படுத்துவதும், அதற்குப் பதிலாக மதச்சார்பற்ற கல்வியை ஊக்குவிப்பதும்தான் பிரச்சினை என்றால்,…

மேலும்...

மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர் கோரிக்கை!

பாட்னா (03 செப் 2022): பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை உத்தரபிரதேசத்தில் உள்ளதைப் போன்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளில், குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் உள்ள சீமாஞ்சல் பகுதியில் ஆய்வு நடத்த நிதிஷ் குமார் அரசிடம் கோரிக்கை வைத்தோம். இந்த பிராந்தியங்களில் யார் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை நடத்துகிறார்கள், யார் தங்குகிறார்கள்…

மேலும்...

அஸ்ஸாமில் ஒரே மாதத்தில் மூன்று மதரஸாக்கள் இடிப்பு!

போங்கைகான் (31 ஆக 2022) அசாம் மாநிலத்தில் “பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புடையதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து , போங்கைகான் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரஸாவை இடிக்க அசாம் அரசு புதன்கிழமை காலை உத்தரவிட்டுள்ளது. மார்கசூல் மஆரிஃப் குவாரியானா மதரஸா வளாகம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதனை அடுத்து அந்த மதரசாவை இடிக்க அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மதர்ஸாவை பிடிப்பதற்காக செவ்வாயன்று, அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 224 மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்….

மேலும்...

மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாட முடிவு!

லக்னோ (25 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநில மதரசாக்களில் வகுப்புகள் தொடங்கு முன்பு தேசிய கீதம் பாட மதரசா கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யவும், மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. மே 14 மற்றும் மே 27 க்கு இடையில் நடைபெறும் ஆறு பாடங்களுக்கான தேர்வுகளை மதரசா வாரியம் நடத்தும் என்றும்…

மேலும்...

மதரசாக்களை மூடும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

கவுகாத்தி (20 டிச 2020): அரசு உதவி பெறும் மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூடுவதற்கான அசாம் அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திர மோகன் தெரிவித்தார். மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகள் மூடுவது தொடர்பான அசாம் அரசின் முடிவிற்கு அசாமில் கடுமையான எதிர்ப்பு எழும்பியுள்ளது. . மேலும் இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் . மாநிலத்தில்…

மேலும்...

அஸ்ஸாமில் மதரஸா மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அரசு முடிவு!

கவுஹாத்தி (13 பிப் 2020): அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு உள்ள 614 மதரஸாக்களையும், 101 சமஸ்கிருத பள்ளிகளையும் மூடவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும் என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, “அரபி மதரஸாக்களில் பயில்வோர்கள் அரசு வேலைக்கு…

மேலும்...