ஹிஜாப் பிரச்சினையை கிளப்பிய வார்டில் பாஜக டெபாசிட் இழப்பு!

மதுரை (22 பிப் 2022): மதுரை மேலூரில் வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தில் பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாபை கழற்றச் சொன்ன வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக அங்கு டெபாசிட் இழந்தது. மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அமைக்கப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மேலூரில் உள்ள சுந்தரேஸ்வர வித்யாலயா பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8வது வார்டில் திமுக வேட்பாளரான முகமது யாசின் (சேர்மன் வேட்பாளர்)…

மேலும்...

மதுரையில் டெபாசிட் இழந்த திமுக!

மதுரை (22 பிப் 2022): மதுரையில் ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளரிடம் திமுக அதிமுக இரு கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128…

மேலும்...

ஹிஜாபை அகற்றச்சொன்ன பாஜகவை சேர்ந்தவர் சிறையிலடைப்பு!

ஹிஜாபை அகற்றச்சொன்ன பாஜகவை சேர்ந்தவர் சிறையிலடைப்பு! மதுரை (20 பிப் 2022): மதுரை மேலூரில் முஸ்லீம் பெண்ணின் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜகவை சேர்ந்தவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8 ஆவது வார்டில் உள்ள அல்அமீன் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் கூறியதற்கு தேர்தல்…

மேலும்...

மதுரை அருகே முஸ்லீம் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட்!

மதுரை (19 பிப் 2022): மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் முஸ்லீம் பெண் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது…

மேலும்...

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

மதுரை (28 ஆக 2021): மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மதுரை நத்தம் சாலையில் சாலையில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இந்த விபத்தில் இரண்டு கட்டுமான பணியாளர்க்கிறாள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், விபத்தின் இடுபாடுகலில் இருவரை தவிர வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து…

மேலும்...

மதுரையிலும் பொதுமுடக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!

மதுரை (22 ஜூன் 2020): மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 தேதி வரையில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், பரவை டவுண் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஜூன் 23 நள்ளிரவு முதல் ஜூன் 30 வரையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவ…

மேலும்...

கல்லூரி மாணவிகளுக்கு போதைப் பொருள் கொடுத்து வீடியோ எடுத்த கும்பல் கைது!

மதுரை (11 மே 2020): பொள்ளாச்சி சம்பவத்தைப் போல கல்லூரி கல்லூரி மாணவிகளுக்கு போதை பொருள் கொடுத்து சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.. அதற்கு அருகில் ரெஸ்டாரெண்ட் மற்றும் மொபைல் போன் கடையும் உள்ளது. இங்குள்ள மூன்று இளைஞர்கள் அக்கல்லூரி மாணவிகளை வலையில் வீழ்த்தியுள்ளனர். அவர்களை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று கூல்ட்ரிங்ஸில் போதைப் பொருள் கலந்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து அவர்களை…

மேலும்...

மதுரையில் பயங்கரம் – மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு!

மதுரை (29 ஜன 2020): மதுரையில் மளிகைக் கடைக்காரரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு மேலும் பெட்ரோல் குண்டைவ்யும் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அனுப்பானடி சின்னகன்மாய் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவரது மளிகைக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடைபெற்று…

மேலும்...