பிஞ்சு மனதில் சாதி வெறி – பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் பலி!

திருநெல்வேலி (30 ஏப் 2022): நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில வாரமாக +2 மாணவர்கள், தங்கள் சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சாதிக்கயிறு கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. +2 மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர்…

மேலும்...

ராஜஸ்தான் கலவரத்தை தொடர்ந்து முஸ்லீம் முதியவர் படுகொலை!

அஜ்மீர் (10 ஏப் 2022): ராஜஸ்தான் கலவரத்தின் அடுத்த நாள் 55 வயது முஸ்லீம் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 3 அன்று, வன்முறையாக மாறிய பைக் பேரணியைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான 40 கடைகள் தாக்கப்பட்டன. கலவரத்தின் அடுத்த நாள் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவாரில் 55 வயது சலீம் என்ற முஸ்லீம் முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார், சம்பவ இடத்தில் இருந்த, சலீமின் பக்கத்து வீட்டுக்காரர் ஷாபாஸ் கூறுகையில், கொலை நடந்த…

மேலும்...

கர்நாடகாவில் பஜ்ரங்தளை சேர்ந்தவர் கொலை – முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பிய வன்முறை!

ஷிமோகா (21 பிப் 2022): கர்நாடகாவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 26 வயதான ஹர்ஷா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகாவில் பஜ்ரங் தள் பிரமுகரான ஹர்ஷாவைக் கொன்றது யார் என்பதில் தெளிவு இல்லாத நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினரும் மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களும் இந்தக் கொலைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஷிமோகா பகுதியில் பல…

மேலும்...

புஷ்பா திரைப்பட ஸ்டைலில் படுகொலை – சிறுவர்கள் அரங்கேற்றிய பயங்கரம்!

புதுடெல்லி (21 ஜன 2022): டெல்லியில் புஷ்பா என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்த 3 சிறுவர்கள் அதே முறையில் 24 வயது இளைஞனை குத்திக் கொலை செய்துள்ளனர். மேலும் அந்த சிறுவர்கள் பிரபலம் அடைய அந்த இளைஞன் கொல்லப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிரவும் முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புஷ்பா என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்து இந்தக் குற்றத்தைச் செய்யததாக காவல்துறையிடம்…

மேலும்...

19 வயது முஸ்லீம் வாலிபர் படுகொலை -4 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கைது!

கடக் (19 ஜன 2022): கர்நாடகாவில் 19 வயது வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தின் நர்குண்டு நகரில் சமீர் மற்றும் ஷம்சீர் ஆகியோர் திங்கள்கிழமை இரவு 7:30 மணியளவில் இருச்சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களது வாகனத்தை மறித்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. அவர்களிடமிருந்து இருவரும் தப்பிச் செல்ல முயன்ற போது விடாமல் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர்….

மேலும்...

எஸ்டிபிஐ தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒரு ஆர் எஸ் எஸ் தலைவர் கைது!

ஆலப்புழா (27 டிச 2021): எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைவிடத்தை அமைத்து கொடுத்ததற்காக ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த மேலும் ஒரு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புரம் வட்டத்தில் உள்ள ஆலுவா என்ற ஊரைச் சேர்ந்த அனீஷ் என்பவரை, கொலையாளிகளுக்கு புகழிடம் கொடுத்ததற்காக காவல் துறையினர் கைது செய்தனர். ஷான் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆலுவா ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பதுங்கியிருந்து தப்பிச் செல்ல உதவியவர் அனீஷ். இதன் மூலம் ஷான் வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15…

மேலும்...

பாஜக பிரமுகர் கொலை தொடர்பாக 4 எஸ்டிபிஐயினர் கைது!

ஆலப்புழா (21 டிச 2021): கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பைக்கையும் காவல்துறையினர் கைப்பற்றினர். சரியான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே, ஆலப்புழா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் அறிவிக்கப்பட்டத் தடை உத்தரவு டிசம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட…

மேலும்...

எஸ்டிபிஐ தலைவர் கொலையில் ஆர்எஸ்எஸுக்கு தொடர்பு – காவல்துறை!

ஆலப்புழா (20 டிச 2021): கேரளாவில் நடந்த எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் இருவர் கைது கைது செய்யப்பட்ட இருவரும் தீவிர ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என போலீசார் தெரிவித்தனர். எச்டிபிஐ தலைவர் ஷான் கொலை செய்யப்பட வழக்கில் ரதீஷ், பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஷான் கொலையில் அவரை நன்கு அறிந்தவர்களே கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் விசாணையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆதாரங்களின்படி, ரதீஷ் மற்றும்…

மேலும்...

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! கோவை (20 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கேரளா, ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில செயலர் ஷான் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து, 12 மணி நேரத்துக்குள் பா.ஜ.,வை சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதனால்…

மேலும்...

கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக தலைவர்கள் படுகொலை – 50 பேர் கைது!

ஆலப்புழா (19 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது விவகாரத்தில் இரு கொலை தொடர்பிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் ஆலப்புழாவில் நேற்று இரவு எஸ்டிபிஐ தலைவர் கே.எஸ்.ஷான் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக எஸ்டிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே பாஜக பிரமுகர் கொலையில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்…

மேலும்...