இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – சிறுபான்மை ஆணையத்தில் அதிகரிக்கும் புகார்கள்!

புதுடெல்லி (13 பிப் 2023): நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்நிலையில் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தால் பெறப்பட்ட மொத்த புகார்கள் மற்றும் மனுக்களில் 71 சதவீதம் முஸ்லிம் சமூகத்துடன் மட்டுமே தொடர்புடையது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் முஸ்லிம் சமூகம் தொடர்பான அதிகபட்ச புகார்கள் சிறுபான்மை ஆணையத்துக்கு கிடைத்துள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சின்…

மேலும்...

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாஜக கூட்டத்தில் சாமியார் அழைப்பு!

புதுடெல்லி (08 பிப் 2023): முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய வேண்டும் என்று இந்துக்களுக்கு சாமியார் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை இந்துத்துவா அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சாமியாரின் கொலை வெறி உரை இணையங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவின் ஹரியானா தலைவரும் கர்னிசேனா தலைவருமான சூரஜ் பால் அமுவும் சுதர்சன் டிவியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவான்கேக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அந்த சாமியார் இவ்வாறான வெறுப்புப் பேச்சினை…

மேலும்...

குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் வெற்றியை அள்ளிய பாஜக!

அஹமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ள 19 சட்டமன்றத் தொகுதிகளில் 17 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஒரு முஸ்லீம் வேட்பாளரை கூட பாஜக நிறுத்தவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும் இது நடந்துள்ளது. இதற்கிடையில், மீதமுள்ள 19 இடங்களில் ஜமால்பூர்-காடியா மற்றும் வத்காம் ஆகிய 2 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதேவேளை பாஜக வெற்றிபெற்ற பல தொகுதிகளில், பல முஸ்லிம் வேட்பாளர்கள் பாஜக…

மேலும்...

திசைமாறும் திருமாவளவன் – கலக்கத்தில் திமுக!

சென்னை (07 அக் 2022): தமிழக அரசியலில் சமீபத்தில் புயலை கிளப்பி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த 2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர் எஸ் எஸ் பேரணியை தடுத்து நிறுத்தியதில் திருமாவின் பங்கு மிக முக்கியமானது. எனினும் திருமா தலைமையில் நடைபெறவிருந்த சமூக நல்லிணக்க பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசை விமர்சித்திருந்தார் திருமா. இந்நிலையில் அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு…

மேலும்...

முஸ்லிம்கள்தான் எங்களுக்கு உதவினார்கள் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மக்கள்!

பெங்களூரு (10 செப் 2022): கர்நாடகாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியபோது, ​​தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராம்நகருக்கு அரசு அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை. அங்கு களத்தில் இறங்கிய முஸ்லீம் தன்னார்வலர்கள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுடன் உதவி வருகின்றனர். அங்குள்ள மக்கள் நாங்கள் ஒட்டுப் போட்ட தலைவர்கள் இறந்துவிட்டோமா அல்லது உயிருடன் இருக்கிறோமா என்று…

மேலும்...

ரம்ஜான் பண்டிகையின்போது விசமிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாதீர் – முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை!

புதுடெல்லி (28 ஏப் 2022): ரம்ஜான் பண்டிகை தினத்தின்போது விசமிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாமல் அமைதியான வழியில் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என 14 முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் ஜமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் பிற 14 அமைப்புகளின் கையொப்பமிடப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “ரம்ஜான் பண்டிகை தினத்தன்று எல்லா முஸ்லிம்களும் ஈத்காவுக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் அமைதியை கடைபிடிக்கவும்; உங்களை தூண்டிவிட முயற்சிக்கும்…

மேலும்...

தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி வாழ்கிறோம் தெரியுமா? – டெல்லிக்கு பாடம் நடத்திய நவாஸ்கனி!

சென்னை (20 ஏப் 2022): டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் உடமைகள் தகர்க்கப்படுகிறது, பாதுகாப்பற்ற நிலையில் அங்குள்ள இஸ்லாமியர்கள் தவித்து…

மேலும்...

வீடுகளை இடித்த அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முஸ்லிம்கள் முடிவு!

போபால் (16 ஏப் 2022): மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு முஸ்லிம்களின் வீடுகளை இடித்த நிலையில் இதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் கார்கோன் நகரில் ராமநவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் வன்முறையில் ஈடுபட்டதாக முஸ்லிம்களின் வீடுகளை மட்டும் அரசு இடித்து தள்ளியுள்ளது. இதனால் பலர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். “அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்று போபால் ஷஹர் காசி…

மேலும்...

கர்நாடகாவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்க இந்து அமைப்புகள் கோரிக்கை!

பெங்களூரு (04 ஏப் 2022): மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் இந்து அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, ஒலிபெருக்கி பயன்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனையின் மாநிலத் தலைவர் சித்தலிங்க சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மசூதிகளில் ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்…

மேலும்...

பெண்கள் விருப்பப்படி வாழ விடுங்கள் – ஹிஜாப் விவகாரத்தில் உலக அழகி பரபரப்பு கருத்து!

சண்டிகர் 931 மார்ச் 2022): ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் கவுர் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். சண்டிகரில் ​​ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹர்னாஸ், ஹிஜாப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். ஹிஜாப் பிரச்சினையை அரசியலாக்குபவர்களுக்கு எதிரிப்பு தெரிவித்த ஹர்னாஸ், ஒரு பெண் ஹிஜாப் அணிவது அவரின் விருப்பம், என்றார். மேலும் “பெண்கள் இஷ்டப்படி வாழட்டும். நம் பெண்கள் அனைவரும் வெவ்வேறு நிறங்கள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து வந்தவர்கள். நாம் ஒருவருக்கொருவர் ஒருவரை…

மேலும்...