தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி வாழ்கிறோம் தெரியுமா? – டெல்லிக்கு பாடம் நடத்திய நவாஸ்கனி!

சென்னை (20 ஏப் 2022): டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் உடமைகள் தகர்க்கப்படுகிறது, பாதுகாப்பற்ற நிலையில் அங்குள்ள இஸ்லாமியர்கள் தவித்து…

மேலும்...

எம்பி நவாஸ்கனி மற்றும் மமகவினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் – மனமேல்குடியில் போலீஸ் குவிப்பு!

அரந்தாங்கி (02 ஏப் 2021): ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி மற்றும் மமகவினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுக்கா, கோட்டைப்பட்டினம் அருகில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி.M.P அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்கள். அம்மாபட்டினம் பகுதியில் வாக்கு சேகரித்து விட்டு, கோட்டைப்பட்டினத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்து கொண்டிருக்கும் வேளையில் இடையில் உள்ள…

மேலும்...

தவறே செய்யாதவர்களை சிறையில் அடைத்தது யாரை திருப்திப் படுத்த? -நவாஸ் கனி கேள்வி!

சென்னை (12 ஏப் 2020): இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது, என்று இ.யூ முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த 8 பேர் (4 பெண்கள்) உட்பட 11 பேர் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது. ஊரடங்கு உத்தரவு வருவதற்கு…

மேலும்...