நிர்பயா குற்றவாளிகள் நால்வரின் மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது!

புதுடெல்லி (20 மார்ச் 2020): நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத் தண்டனையும் இன்று காலை நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங்…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மீண்டும் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்துள்ளது டெல்லி நீதிமன்றம். மார்ச் 3 ஆம் தேதி தூக்க்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது நிலுவையில் இருப்பதால் 3ம் தேதி நால்வரையும் தூக்கிலிட தடை விதிக்குமாறு பவன் குப்தா சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், குற்றவாளிகள்…

மேலும்...

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா?- தூக்கிலிருந்து தப்பிக்க மீண்டும் முயற்சி!

புதுடெல்லி (20 பிப் 2020): நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி தூக்கு தண்டனையை தள்ளிப் போட மீண்டும் முயற்சி செய்துள்ளார். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம் தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா,…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ஆம் தேதி தூக்கு!

புதுடெல்லி (17 பிப் 2020): நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான புதிய தேதியை அறிவிக்குமாறு நிர்பயாவின் பெற்றோர் மற்றும் தில்லி அரசு தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி தர்மேந்தர் ரானா, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் மாதம் 3ம் தேதி காலை 6 மணிக்கு…

மேலும்...

முடிந்தும் முடியாத நிர்பயா வழக்கு – மீண்டும் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

புதுடெல்லி (02 பிப் 2020): நிர்பயா குற்றவாளிகளுக்கு எதிராக திகார் சிறைச் சாலை, மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிர்பயா வன்புணர்வு படுகொலை வழக்கின் குற்றவாளிகளான அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், நால்வரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில்…

மேலும்...

நிர்பயாவின் தாயார் நீதிமன்ற வளாகத்தில் கதறல்!

புதுடெல்லி (31 ஜன 2020): நிர்பயாவின் தாய் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதுள்ளார். நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை மீண்டும் ஒரு முறை தள்ளிப்போனதாலேயே நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய நான்கு பேருக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி டத் வாரண்ட் ( தூக்கிலிடும்…

மேலும்...

நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு!

புதுடெல்லி (31 ஜன 2020): நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் ஒத்திவைத்து டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 06 மணிக்கு தூக்கிலிட உச்ச நீதிமன்றம் உத்தர்விடிருந்த நிலையில் தூக்கிலிடுவதை ஒத்திவைத்து இரண்டாவது முறையாக டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூக்கு தண்டனையை ஒத்திவைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி கீழமை நீதிமன்ற கூடுதல்…

மேலும்...

நிர்பயா வழக்கில் குற்றவாளியின் மனு தள்ளுபடி – பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு உறுதி!

புதுடெல்லி (29 ஜன 2020): நிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தது சரியே எனவும் உத்தரவிட்டனர். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி…

மேலும்...

நிர்பயா வழக்கில் திடீர் திருப்பம் – தள்ளிப் போகுமா தூக்குத் தண்டனை?

புதுடெல்லி (28 ஜன 2020): நிர்பயா வழக்கின் திடீர் திருப்பமாக சிறையில் தூக்குத் தண்டனை குற்றவாளி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புதிய மனு நீதிமன்றத்தில் அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி!

புதுடெல்லி (24 ஜன 2020): நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி நடைபெற்று வருகின்றன. டெல்லி மாணவி நிர்பயா கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகளில் நான்கு பேரின் தூக்குத் தண்டனை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 4 பேரும் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள், கருணை…

மேலும்...