கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய மாணவி மரணத்தை தொடர்ந்து பள்ளி மூடல்!

தோஹா (14 செப் 2022): கத்தாரில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஸ்பிரிங் ஃபீல்டு இன்டர்நேஷனல் பள்ளியை அரசு மூடியுள்ளது. நான்கு வயது சிறுமியின் மரணத்தில் பள்ளி ஊழியர்கள் தவறிழைத்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என கல்வி அமைச்சு டுவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளது. கோட்டயம் சிங்கவனத்தைச் சேர்ந்த அபிலாஷ் சாக்கோ – சௌமியா தம்பதியரின் மகள் மின்சா ஞாயிற்றுக்கிழமை பள்ளி பேருந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை பேருந்தில்…

மேலும்...

கத்தாரில் GCC ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் நேரடியாக ஓட்டுநர் உரிம சோதனைக்கு விண்ணப்பிக்கலாம்!

தோஹா (14 செப் 2022): GCC ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் கத்தாரில் ஓட்டுநர் உரிம சோதனைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். அவர்கள் டிரைவிங் கோர்ஸ் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது, ​​கத்தாரில் டிரைவிங் லைசென்ஸ் பெற, டிரைவிங் படிப்பில் சேர வேண்டும். இருப்பினும், ஏதேனும் GCC நாட்டில் வசிப்பவர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால், அவர் இந்தப் படிப்பில் சேர தேவையில்லை. இதுகுறித்து கத்தாரின்…

மேலும்...

கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய சிறுமி மரணம்!

தோஹா (12 செப் 2022): கத்தாரில் பூட்டிய பள்ளிப் பேருந்தில் உள்ளே இந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் சிங்கவனத்தை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ என்பவரது மகள் மின்சா. இவர் கத்தார் அல்வக்ராவில் உள்ள ஸ்பிரிங் ஃபீல்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கேஜி ஒன் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை குழந்தை பேருந்தில் தூங்குவதை கவனிக்காத ஊழியர்கள் மற்ற குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டு பஸ்சை பூட்டினர். மதியம் தனது குழந்தைகளை வீட்டிற்கு…

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரிலும் தடை!

தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் காட்டுவதால் படத்தை தடை செய்ய குவைத் அரசு முடிவு செய்தது. இந்நிலையில் கத்தாரிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படமும் கத்தார், குவைத், ஐக்கிய அரபு…

மேலும்...

தோஹா சர்வதேச புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்!

தோஹா (13 ஜன 2022): 31வது தோஹா சர்வதேச புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது. தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது, மேலும் கோவிட் பரவலை அடுத்து மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 30 சதவீதத்தினர் மட்டுமே ஒரே நேரத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்படும். தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் கடந்த ஒரு வருடத்தில் கோவிட் நோயிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே உள்ளே செல்லலாம். இந்த ஆண்டு, 37 நாடுகளில் இருந்து 430 பதிப்பாளர்கள் மற்றும் 90…

மேலும்...

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை!

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம்! தோஹா (15 டிச 2021): கத்தாரில் மானிய விலை பொருட்களை விற்பனைக்கு உட்படுத்தினால் 5 லட்சம் ரியால் அபராதமும் 1 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும். நேற்று முன் தினம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மானிய விலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மானியம் வழங்கப்படும் பொருட்களை ஏற்றுமதி…

மேலும்...

கத்தாரில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கால அளவு மாற்றம்!

தோஹா (16 நவ 2021): கத்தாரில் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து எட்டு மாதங்களுக்குப் பிறகு எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி தற்போது இரண்டு டோஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறையும் என்ற…

மேலும்...

ஓட்டுநர் இல்லாத மின் பேருந்துகளை இயக்க கத்தார் அரசு திட்டம்!

தோஹா (04 நவ 2021): கத்தார் தெருக்களில் ஓட்டுநர் இல்லாத மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து அமைப்புகளை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் நோக்கத்துடன் முழு தானியங்கி மின்சார மினி பேருந்துகளை அறிமுகப்படுத்த கத்தார் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக முழு தானியங்கி மின்சார பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை வெற்றியடைந்தால், Fifa உலகக் கோப்பையில் பார்வையாளர்களுக்காக இ-மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். சீனாவின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான யுடோங், கத்தாரின் பொது போக்குவரத்து…

மேலும்...

கத்தார் திரைப்பட விழாவில் காரில் இருந்தபடியே சினிமா பார்க்கும் வசதி!

தோஹா (01 நவ 2021): கத்தார் அஜியால் திரைப்பட விழாவில் டிரைவ்-இன் சினிமா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதற்காக லூசில் சிட்டியில் வாகனங்களில் இருந்தபடியே திரைப்படம் பார்க்க பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கும் அஜியால் திரைப்பட விழாவின் ஒன்பதாவது பதிப்பில் 44 நாடுகளைச் சேர்ந்த 85 படங்கள் இடம்பெறும். கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு தோஹா ஃபிலிம் இன்ஸ்டிடியூட் தனது முதல் AGIA திரைப்பட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இம்முறையும் கடந்த…

மேலும்...

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கத்தார் அரசு அதிரடி உத்தரவு!

தோஹா (14 ஆக 2021): அரசு அனுமதியின்றி கல்விக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என்று கத்தார் கல்வி அமைச்சகம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் தனியார் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் வசூலிக்கும் கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உரிமத் துறை கடுமையாக கண்காணித்து வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் முன் அனுமதி இல்லாமல் கல்வி குறித்த எந்த கட்டணமும் உயர்த்தப்படக் கூடாது. அவ்வாறு அனுமதியின்றி கட்டங்களை உயர்த்துவது சட்டவிரோதமாக கருதப்படும்…

மேலும்...