புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதுகுறித்த ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதியைக் கொண்டு திறக்கவும் இல்லை. விழாவுக்கு அவரை அழைக்கவும் இல்லை. இது நாட்டின் மிக…

மேலும்...
Rahul and Modi

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று விசாரித்த சூரத் மாவட்ட நீதிபதி வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து…

மேலும்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் நாட்டை அவமதித்ததாகக் கூறி ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய பாஜக கோரி வருகிறது…

மேலும்...

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று காஷ்மீர் திரும்பியது. இன்றைய பயணம் பனிஹாலில் இருந்து அனந்த்நாக் வரை திட்டமிடப்பட்டது. ஆனால் பயணம் தொடங்கி பத்து கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பு காரணங்களை கூறி பயணம் அவசரமாக நிறுத்தப்பட்டது. உமர் அப்துல்லா இன்று இருவருடனும் இருந்தார். பாதுகாப்பு பிரச்னைகள் இருந்தால், பயணத்தை…

மேலும்...

ஆர் எஸ் எஸ் அலுவலகம் செல்ல, என் தலை வெட்டப்பட வேண்டும் -ராகுல் காந்தி!

புதுடெல்லி (17 ஜன 2023): காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்துள்ள ராகுல் காந்தி, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி இன்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது….

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது!

புதுடெல்லி (03 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது. பயணத்தின் இரண்டாவது கட்டம் டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட்டில் இருந்து காலையில் தொடங்கும். இந்த யாத்திரை யாத்திரை இன்று உத்தரபிரதேசத்திற்குள் நுழைகிறது. ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரையிலான 3122 கி.மீ பயணம் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்குகிறது. இன்று முதல் வரும் 5ம் தேதி வரை உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்கிறார்….

மேலும்...

பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவை தாக்கும் – ராகுல் காந்தி எச்சரிக்கை!

புதுடெல்லி (26 டிச 2022): பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவை தாக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ரணுவ வீரர்களுக்கும் இடையே கல்வான் மற்றும் டோக்லாம் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுகொன்று தொடர்புடையவை. தற்போது பாகிஸ்தானுடன் சீனா பொருளாதார உறவை மேம்படுத்தியுள்ளது. இந்தியாவை சீனா தாக்குதவற்கு பாகிஸ்தானுடன் கைகோர்க்கும், இந்தியாவுக்க்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்….

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரைக்கு தடையா?

புதுடெல்லி (21 டிச 2022): உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் பாரத் ஜோடோ யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒன்றிய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மரபணு வரிசைமுறையை அதிகரிக்கவும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு ஒன்றிய சுகாதாரத்துறை…

மேலும்...

கிறிஸ்துமஸ் தினத்தன்று ராகுல் காந்தியுடன் இணையும் கமல் ஹாசன்!

சென்னை (19 டிச 2022): கிறிஸ்துமஸ் தினத்தன்று பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார் கமல்ஹாசன். இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில், “ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தேசிய தலைநகரில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் எம்என்எம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்தார். ஏற்கனவே பாரத் ஜோடோ யாத்ராவில் ஸ்வரா பாஸ்கர் உட்பட…

மேலும்...

காங்கிரஸுக்கு எதிராக பாஜகவுக்கு ஊடகங்கள் உதவுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஜெய்ப்பூர் (16 டிச 2022): பாஜகவை ஆட்சியில் இருந்து காங்கிரஸ் வீழ்த்தும் என்று ராகுல் காந்தி கூறினார். பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் சர்வாதிகாரிகளின் கட்சி அல்ல. வட மாநிலங்களில் பாரத் ஜோடோ யாத்ரா வெற்றியடையாது என்று சிலர் கூறியதாகவும் ஆனால் மக்கள் ஆதரவுடன் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றி பெற்றுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும்…

மேலும்...