உண்மை மட்டுமே சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டும் – ராகுல் காந்தி!

புதுடெல்லி (27 ஜூலை 2022): செவ்வாயன்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசாங்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இந்த சர்வாதிகாரத்திற்கு உண்மைதான் முடிவு கட்டும் என்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் “சர்வாதிகாரத்தைப் பாருங்கள், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியாது, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதிக்க முடியாது. காவல்துறை மற்றும் ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், எங்களை கைது செய்தாலும், உங்களால் ஒருபோதும் எங்களை…

மேலும்...

பாஜகவைக் கை கழுவும் எடப்பாடி – அதிர்ச்சியில் பாஜக!

சென்னை (24 ஜூன் 2022) : அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராகுல் காந்தியுடன் எடப்பாடி ரகசியமாக பேசியுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனை இரு தரப்பினரும் இன்னும் உறுதிபடுத்தவில்லை. மேலும் அ.தி.மு.க. தொண்டர்களின் ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியாமல் போனதை, தனக்கு ஏற்பட்ட தோல்வியாக எடப்பாடி கருதுகிறார். ஓபிஎஸ்-ஐயே பாஜக விரும்புகிறது…

மேலும்...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்தியா – ராகுல் காந்தி பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (03 பிப் 2022): உலக நாடுகளிலிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில் அனைத்து பக்கமும் வெறுப்புகளால் நமது நாடு சூழப்பட்டிருக்கிறது. உலக நாடுகளால் தனித்து விடப்பட்டிருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆபத்தான நிலையில் உள்ளது நம் தேசம். இதை நான் விரும்பவில்லை. இது என்னை கவலையடைய செய்கிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பிரித்து வைப்பதுதான் இந்தியாவின் இலக்கு ஆகும். ஆனால் பாஜக அரசோ வெளியுறவுக் கொள்கை மூலம் இரண்டையும் ஒன்றிணைத்து…

மேலும்...

பாஜகவால் காலூன்ற முடியாது – ராகுலுக்கு அண்ணாமலை பதில்!

சென்னை (03 பிப் 2022): தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்’ என்று ராகுல் காந்திக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் பாஜகவால் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும், தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதில் கருத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

மேலும்...

காங்கிரஸ் இந்துக்கள் கட்சி – ராகுல் காந்தி உரை!

ஜெய்ப்பூர் (13 டிச 2021): காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, இந்து மற்றும் இந்துத்துவா என்பதற்கு வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார். இரண்டும் வெவ்வேறானவை எனக்கூறிய அவர், ‘ நான் ஒரு இந்து, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்துத்துவவாதிகள்’ என கடுமையாக விமர்சித்தார். உண்மையை நேசிப்பவர்கள் இந்துக்கள் எனக் கூறிய ராகுல்காந்தி, மகாத்மா காந்தி உண்மையைத் தேடியவர் எனத் தெரிவித்தார். ஆனால், நாதுராம் கோட்சே இந்துத்துவவாதி,…

மேலும்...

மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் மம்தா – காங்கிரஸ் மீது சாடல்!

புதுடெல்லி (02 டிச 2021): காங்கிரஸ் தவிர மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ளார். மேற்கு வங்க இடைத்தேர்தலில் பவானிபூரில் அமோக வெற்றி பெற்ற பிறகு, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை அமைப்பதுதான் மம்தா பானர்ஜியின் நடவடிக்கை. ஆனால் தற்போது UPA மாற்றுக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை மம்தா எடுத்துள்ளார். நேற்று முன் தினம் மகாராஷ்டிரா வந்தடைந்த மம்தா பானர்ஜி, இன்று சரத் பவாரை…

மேலும்...

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ 4 லட்சம் வழங்க ராகுல் காந்தி கோரிக்கை!

புதுடெல்லி (24 நவ 2021): கோவிட்டால் இறந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ” கோவிட் காரணமாக இறந்தவர்கள் குறித்த நம்பகத்தகுந்த தகவல்களை அரசு வழங்க வேண்டும். அதேபோல், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை. மக்களின் வேதனையை அரசு குறைப்பதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குஜராத் மாடல் என பரபரப்பாக…

மேலும்...

வேளாண் சட்டம் ரத்து – மோடியின் வாக்குறுதியை விவசாயிகள் நம்பத் தயாரில்லை – ராகுல் காந்தி!

புதுடெல்லி (21 நவ 2021): பிரதமரின் வார்த்தைகளை விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிவித்ததை அடுத்து ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த கால அனுபவங்கள் விவசாயிகளை வேலைநிறுத்தத்தைத் தொடரத் தூண்டியுள்ளன. நரேந்திர மோடி முன்பு பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளார். மக்கள் இன்னும் அவரின் பொய்யான…

மேலும்...

ட்விட்டர் மீது ராகுல் காந்தி பாய்ச்சல் – யூடூபில் பரபரப்பு வீடியோ!

புதுடெல்லி (13 ஆக 2021): ட்விட்டர் தனது நடுநிலையை இழந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறுமியின் பெற்றோருடன் ராகுல் காந்தி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார். இது டுவிட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ராகுல் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார் .ஆனால் அதனையும் மீறி அவரின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர்…

மேலும்...

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு திடீர் நீக்கம்!

புதுடெல்லி (07 ஆக 2021): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் பெற்றோரின் படத்தை பகிர்ந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் வாகனத்தில் சிறுமியின் பெற்றோர் உடனான உரையாடலில் பெற்றோரின் முகங்களை தெளிவாக வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் சர்சைக்குரிய ட்விட்டை பகிர்ந்தற்காக, ராகுலுக்கு எதிராக டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது. ராகுல் காந்திக்கு…

மேலும்...