சேது சமுத்திர திட்ட தீர்மானம் – சட்டசபையில் நிறைவேறியது!

சென்னை (12 ஜன 2023):தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் “Feasibility Study”-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன்சிங்கால் 2004ம் ஆண்டு ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவராக இருந்த…

மேலும்...

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்!

திருவனந்தபுரம் (31 டிச 2020): மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், தங்கள் நலனுக்கு எதிரானவை என்று கருதி அவற்றுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநில அரசுகளும்…

மேலும்...

அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

சென்னை (28 செப் 2020): அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. * அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு…

மேலும்...

இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்!

வாஷிங்டன் (21 மே 2020): இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் மிகைத்து நிற்கும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் உலக அளவில் பேசுபொருளாக உள்ளது. சமீபத்தில் கொரோனா பரவலில் இஸ்லாமியர்களை மையப்படுத்தி காய் நகர்த்திய இந்திய அரசின் நடவடிக்கைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம் என எல்லாவகைகளிலும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவை அரபு நாடுகளின் பார்வைக்குச்…

மேலும்...

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ஐதராபாத் (16 மார்ச் 2020): குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி இன்று கூடிய தெலுங்கானா சட்டசபையில் சிஏஏ என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், சட்டசபையில் பேசியபோது, சரியான ஆவணங்கள் இல்லாத மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். அதனால் மத்திய அரசு CAA குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்...

தமிழகத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் – முதல்வர் எடப்பாடி பதில்!

திருச்சி (26 பிப் 2020): தமிழகத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திருச்சியில் முக்கொப்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய அணையின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், , “கதவணை கட்டுமான பணியில் 35 % பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மொத்தமுள்ள 484 பைல்களில் ( தூண்களில் ) தற்போது வரை…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா அரசு தீர்மானம் – முதல்வர் முடிவு!

ஐதராபாத் (17 பிப் 2020): மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள மாநிலங்கள் கூட எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில்…

மேலும்...

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு உலக அளவில் வலுக்கும் எதிர்ப்பு – இன்னொரு அமெரிக்க நகரசபை தீர்மானம்!

நியூயார்க் (14 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சியாட்டிலை அடுத்து மேலும் ஒரு அமெரிக்க நாட்டின் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது சர்வதேச அளவிலும் பரவியுள்ளது. உலகின் மிக முக்கிய நாடுகளின் தலைநகரங்களில் பொதுமக்கள் சிஏஏவை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றியது….

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையிலும் நிறைவேறியது!

புதுச்சேரி (12 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை கவர்னர் கிரண் பேடி, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமிக்கு “சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது” என கடிதம் எழுதினார். அதனை மீறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி…

மேலும்...

இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

மும்பை (10 பிப் 2020): முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமம் ஒன்றில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ள இஸ்லாக் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆயிரம் பேர் உள்ள இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்த கிராமத்தில். கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு…

மேலும்...