21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்!

சென்னை (26 செப் 2020): 21 குண்டுகள் முழ ங்க மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர்…

மேலும்...

ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை வீண் – எஸ்பி.பால சுப்ரமணியன் மறைந்தார்!

சென்னை (25 செப் 2020): ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் மறைந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

மேலும்...

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்!

சென்னை (19 ஆக 2020): பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி, உடல் நிலை ஆரம்பத்தில் சீராக இருந்தது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை…

மேலும்...