சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டிச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்த நபரின் குடும்பத்திற்காக சவுதி அரசு இழப்பீடு வழங்கியதை அடுத்து அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜிசான் சிறையிலிருந்து விடுதலையான இவர் அபஹா விமான நிலையத்திலிருந்து ஏர்…

மேலும்...

ஜித்தா விமான நிலையத்தில் நெரிசலை நீக்க நடவடிக்கை!

ஜித்தா (22 ஜன 2023): சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா விமான நிலையத்தின் செயல்பாடுகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ரமலான் மாதத்தில், ஜித்தா விமான நிலையத்தில் பல பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் சரியான நேரத்தில் புறப்பட முடியாமலும், விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமலும் சிரமப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பிறகு விசாரணையில் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குழுக்களாக வரும் உம்ரா யாத்ரீகர்களின் தன்மை, அதிக அளவு மற்றும் சாமான்களின் எடை, பணியாளர் எண்ணிக்கை…

மேலும்...

சவூதியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (21 ஜன 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வியாழன் வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மக்கா மாகாணத்தில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மக்கா கவர்னரேட் ட்வீட் செய்துள்ளது. மக்கா மாகாணத்தில் அல் குன்ஃபுடா, அல் லைத், அல் அர்டியாத் மற்றும் தாயிப் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல் மஜ்மா, அல் ஜுல்பி, அல்…

மேலும்...

சவூதி அரேபியா மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு!

ரியாத் (20 ஜன 2023): சவுதி அரேபிய மசூதிகளில் பாங்கு அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் எண்ணிக்கை நான்காக மட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இருந்தால், அவற்றை அகற்றி மாற்ற வேண்டும் என இஸ்லாமிய விவகார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து இஸ்லாமிய விவகார அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீப் அல் ஷேக் உத்தரவிட்டுள்ளார். நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இயங்கினால், அவற்றை அகற்றி மாற்றி, கிடங்கில் வைக்க வேண்டும் என அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். மேலும் போதிய ஒலிபெருக்கிகள் இல்லாத…

மேலும்...

சவூதி ஜித்தாவில் மிகப்பெரிய மதுபான கிடங்கு – அதிகாரிகள் சோதனையில் சிக்கியது!

ஜித்தா (20 ஜன 2023):சவூதி அரேபியா ஜித்தா நகரில் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சட்டவிரோத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு ஜித்தாவில் உள்ள அல் தய்சீர் மாவட்டத்தில் உள்ள இந்த சட்டவிரோத கிடங்கில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அங்கு இருந்த சட்டவிரோத கிடங்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த மையம், மதுபானங்களை சேமித்து வைக்கும் கிடங்காக தவறாக பயன்படுத்தப்பட்டது சோதனையின்போது தெரியவந்தது. நகராட்சி…

மேலும்...

சவூதியில் காலாவதியான ரீ-என்ட்ரி விசா நுழைவுத் தடை குடும்ப விசாவுக்கு பொருந்துமா?

ரியாத் (17 ஜன 2023): சவூதியில் குடும்ப விசா அல்லது சார்பு விசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் மறு நுழைவு விசாவில் (ரீ-என்ட்ரி) நாட்டை விட்டு வெளியேறிய பிறகு திரும்பவில்லை என்றால், நுழைவுத் தடை பொருந்தாது என்று சவுதி பாஸ்போர்ட் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஆனால் விசா காலத்திற்குப் பிறகு, சார்பு விசாவில் உள்ளவர்கள் பெற்றோரின் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பாஸ்போர்ட் இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது. சவூதி அரேபியாவில் வசிப்பிட அனுமதி பெற்ற வெளிநாட்டவர்கள் ரீ-என்ட்ரி விசா காலாவதியான…

மேலும்...

சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரபு தலைவராக தேர்வு!

ரியாத் (10 ஜன 2023): சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க அரபுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவை தளமாகக் கொண்ட உலகளாவிய பன்மொழி தொலைக்காட்சி செய்தி சேனல் ஆர்டி அரபு நடத்திய கருத்துக் கணிப்பில் முகமது பின் சல்மான் ‘மிகவும் செல்வாக்கு மிக்க அரபு தலைவர் 2022’ என்ற பட்டத்தை வென்றார். வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களின் மொத்த வாக்குகளில் 7.4 மில்லியன் (62.3 சதவீதம்)…

மேலும்...

இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

ஜித்தா (10 ஜன 2023): இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒன்றே முக்கால் லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்திய தூதரகம் முஹம்மது ஷாஹித் ஆலம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சவுதி அமைச்சர் டாக்டர் அப்துல்பத்தாஹ் சுலைன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜித்தா சுப்பர்டோமில் நடைபெற்ற ஹஜ் எக்ஸ்போவில் இந்த பேச்சுவார்த்தை கையெழுத்தானது. இந்த…

மேலும்...

சவூதியில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (08 ஜன 2023): சவுதி அரேபியாவில் குளிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த வாரம் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்கஹ்தானி கூறுகையில், சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வாரம் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாம் இப்போது குளிர்காலத்தின் முதல் காலாண்டில் இருக்கிறோம், அப்போது மழையும் தொடரும், மேலும் வெப்பநிலை குறையும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஓடும் பயணிகள் பேருந்து தீ விபத்து!

ரியாத் (07 ஜன 2023): சவுதி அரேபியாவில் ரியாத் அருகே ஓடும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்த பேருந்து தனியாருக்கு சொந்தமானது. ரியாத்தில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள அஃபிஃப்-தாரா ஈயா சாலையில் வியாழக்கிழமை இரவு 40 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது பஸ்சின் பின்பக்க டயர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது….

மேலும்...