21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்!

சென்னை (26 செப் 2020): 21 குண்டுகள் முழ ங்க மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர்…

மேலும்...

கொரோனா நெகட்டிவ் எனினும் எஸ்பிபிக்கு இந்நிலையா?

சென்னை (08 செப் 2020): பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா சோதனை நெகட்டிவ் என்றபோதிலும் நுரையீரல் முன்னேற்றம அடையவில்லை. கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவரது மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தந்தைக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்…

மேலும்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ.சி.யூவில் கொண்டாட்டம்!

சென்னை (07 செப் 2020): பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் அவரது மனைவியுடன் ஐ.சி.யூ.வில் திருமண நாளை கொண்டாடியுள்ளார். எஸ்பிபி கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ,உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக்…

மேலும்...

எப்படி இருக்கிறார் S.P.B.? – மருத்துவமனை அறிக்கை!

சென்னை (01 செப் 2020): பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன் வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

சென்னை (24 ஆக 2020): பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பிபி சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் “மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் எஸ்.பி.பி. கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். தந்தை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” இவ்வாறு எஸ்.பி.பி.யின் மகன் சரண் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் எஸ்பிபியின் உடல் நிலை மிகவும்…

மேலும்...

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்!

சென்னை (19 ஆக 2020): பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி, உடல் நிலை ஆரம்பத்தில் சீராக இருந்தது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை…

மேலும்...

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

சென்னை (14 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் திரையுலகம் கவலையில் உள்ளது.

மேலும்...