எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தால் நடிகர் சூர்யாவுக்கு புது சிக்கல்!

சென்னை (11 மார்ச் 2022): நடிகர் சூர்யாவுக்கு ஜெய்பீம் படத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் நேற்று வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தாலும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில், பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள ‘உள்ளம் உருகுதையா’ பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், தமிழ் கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இப்பாடலை படத்திலிருந்து நீக்கக் கோரி, அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை…

மேலும்...

எதற்கும் துணிந்தவன் – சினிமா விமர்சனம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில், முழு கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வடநாடு, தென்னாடு என இரு ஊர் மக்களும் பெண் கொடுத்து, பெண் எடுத்து உறவினர்களாக வாழ்ந்து வருகிறார்கள். எதிர்பாராத சமயத்தில் கண்ணபிரான் { சூர்யா } ஊர்கார பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதனால், இரண்டு ஊர் இடையே பெரும்…

மேலும்...

விருதுகளை குவிக்கும் ஜெய் பீம் திரைப்படம்!

சென்னை (24 ஜன 2022): ஞானவேல் எழுதி இயக்கி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்திருந்தார். இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு, அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை சம்பவத்தை திரைக்கதை ஆக்கியிருந்தனர். இப்படம் பலவேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் இப்படத்தை பாராட்டினர்….

மேலும்...

நடிகர் சூர்யாவால் டாக்டரான மாணவி!

சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், சில சர்ச்சைகளைக்கும் உள்ளாகியுள்ளது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா இருளர் இன மக்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் என்பதும் குறிப்பிடதக்கது. இதனை திரைப்பட பிரமோஷன் என்றும் கூறுகின்றனர் சிலர், ஆனால் அவரின் சமூக பங்களிப்பு 2006 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது எனலாம். கல்வியால் மட்டுமே சமூகத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்த நடிகர் சூர்யா…

மேலும்...

ஜெய்பீம் சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குநர்!

சென்னை(19 நவ2021): நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது. இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும்…

மேலும்...

நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு – வீட்டிலே இருப்பதே துரை சிங்கம்தான் – நெட்டிசன்கள் கருத்து!

சென்னை (17 நவ 2021): நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக்…

மேலும்...

ஜெய்பீம் – (சினிமா விமர்சனம்) பிரமிக்க வைக்கும் சினிமா!

தமிழ் சினிமாவில் ஒரு சில படைப்புகள் தான் காலத்தை தாண்டி நம் மனதின் நீங்கா இடம்பிடித்து நிற்கும். தரமான படமாக நிற்கிறது ஜெய்பீம் 1995ம் ஆண்டு அரசாங்கம் சில பெண்டிங் வழக்குகளை உடனே முடிக்க சொல்லி ஆர்டர் போட, போலிஸார் அதற்கான வேலைகளில் இறங்கின்றனர். அதிலிருந்து தொடங்கும் படம், பழங்குடி இருளர் வாழ்க்கையை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறது. எலிக்கறி சாப்பிடுவதிலிருந்து அவர்கள் வாழ்க்கையை நாமே ஏதோ அருகில் பார்த்த உணர்வை இயக்குனர் கடத்துகிறார்….

மேலும்...

நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு நடிகர் சூர்யா கோரிக்கை!

சென்னை (19 ஜூன் 2021): நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் யில் கூறியிருப்பதாவது: அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ‘ஒரே தேர்வு முறை’ என்பது சமூக…

மேலும்...

சூர்யா மீது நடவடிக்கை கூடாது – தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம்!

சென்னை (14 செப் 2020): நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத்தை நேரிடையாகவே விமர்சித்திருந்தார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறிய நடிகர் சூர்யா மாணவர்களை மட்டும் எப்படி நேரடியாக தேர்வு எழுத உத்தரவிடலாம் என்று கேட்டிருந்தார்….

மேலும்...

நடிகர் சூர்யாவின் அடுத்த பரபரப்பு ட்வீட்!

சென்னை (14 செப் 2020): ஒன்றிணைவோம்; மாணவர்களோடு துணை நிற்போம் என்று நடிகர் சூர்யா மற்றும் ஒரு பரபரப்பு வீடியோ ட்விட் வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு அச்சம்காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா…

மேலும்...