கோவின் இணையதளத்தில் ரகசியங்கள் கசிவு – ஒன்றிய அரசு மறுப்பு!

புதுடெல்லி (21 ஜன 2022): கோவிட் தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட கோவின் செயலியில் இருந்து தகவல்கள் கசிந்ததாக வெளியான செய்திகளை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “கோவின் செயலியில் தகவல் கசிவு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்; ஆனால் கசிவுக்கும் செயலிக்கும் தொடர்பில்லை என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது” என்று அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கோவின் செயலியில் உள்ள தகவல்கள் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என்றும்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – ஒன்றிய அரசு பதில்!

புதுடெல்லி (17 ஜன 2022): யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்லை என்று ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ‘ மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடத்தில் காண்பிக்கும் கட்டாயத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு…

மேலும்...

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (21 நவ 2021): விவசாயிகள் போராட்டத்தை, பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன் தீர்த்து வைக்க, ஒன்றிய அரசு முயற்சியில் உள்ளது. அடுத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், விவசாய சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். நாளைக்குள் மசோதா தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, கூட்டு கிசான் மோர்ச்சாவின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமரின் அறிவிப்பு மற்றும் போராட்ட வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். நாடாளுமன்றத்தில் சட்டத்தை…

மேலும்...
Supreme court of India

ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

புதுடெல்லி (15 ஆக 2021): இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது. போதுமான விவாதங்கள் இன்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதேபோல் விவாதங்கள் நடக்காததால் சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள…

மேலும்...

மத்திய அரசு, ஒன்றிய அரசு – ஓபிஎஸ் என்ன சொல்றார் தெரியுமா?

சென்னை (04 ஜூலை 2021): மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”தேசியத்திற்கு எதிரான செயல்கள் நடப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் ஆகும். யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல். கூட்டாட்சி தத்துவம் குறித்து தலைவர்கள் கூறியதை வைத்து ஒன்றிய…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் மீது வழக்கு!

புதுடெல்லி (29 ஜூன் 2021): பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மத்திய பெட்ரோல் அமைச்சர் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக கடும் உயர்வில் உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே நாட்டில் பெட்ரோல் விலை உயர்வதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசின் வரிகளே பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த…

மேலும்...

பாதுகாப்பு படை வீரர்கள் பலி – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

புதுடெல்லி (05 ஏப் 2021): சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 22 பேர் உயிர்தியாகம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை மோசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. திறமையற்ற செயல்பாட்டால்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உளவுத்துறையின் தோல்வி…

மேலும்...

லவ் ஜிஹாத் என்ற வார்த்தையே இல்லை – மத்திய உள்துறை அமைச்சகம் பதில்!

புதுடெல்லி (05 பிப் 2020): லவ் ஜிகாத் என்ற வார்த்தை, சட்டத்தின் கீழ் இல்லை அதைபோல் துக்டே துக்டே கேங்க் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. ‘துக்டே துக்டே கேங்க்’ என, எதிர்க்கட்சிகளை, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். இந்த துக்டே துக்டே கேங்க் தொடர்பான தகவல் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, சமூக ஆர்வலர் ஒருவர், தகவல்…

மேலும்...

தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா கொடுத்துப்பாருங்கள் – பாஜகவை மிரட்டும் சிவசேனா!

புதுடெல்லி (04 பிப் 2020): மத்திய அரசுக்கு தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்துப்பாருங்கள் என்று சிவசேனா எம்பி விநாயக் ரௌத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய சிவசேனை எம்பி விநாயக் ரௌத் , “உங்களுக்கு தைரியம் இருந்தால், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குங்கள். தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) சிவசேனை எதிர்க்கும். நீங்கள் எங்களுக்கு ஹிந்துத்வாவை கற்றுத் தர வேண்டாம். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பெண்களுக்கு…

மேலும்...