அமெரிக்க சம்பவத்துக்கு எதிராக போராட்டத்தில் மண்டியிட்ட கனடா பிரதமர்!

டொரன்டோ (07 ஜூன் 2020): ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்டு போலீஸ் அத்துமீறலால் சமீபத்தில் அமெரிக்காவில் உயிரிழந்தார். இதையடுத்து இன வெறி போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கனடா தலைநகரான ஒட்டாவாவில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை மண்டியிடக் கூறினர். இதையடுத்து அவர் மண்டியிட்டு கோஷம் எழுப்பி போராட்டத்துக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

மேலும்...

ஃபேஸ்புக்கில் தீ

அமெரிக்காவில் பரவியுள்ள நெருப்பு ஃபேஸ்புக் நிறுவனத்தையும் சுட ஆரம்பித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பரை வெள்ளை இனக் காவலர் டெரெக் கைது செய்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் ஏறி அமர்ந்து கொன்றுவிட, உருவான தீப்பொறியால் போராட்டம், கலவரம், மறியல், சூரையாடல் என்று நாடு அதகளப்பட்டுக் கிடக்கிறது. நாளுக்கு நாள் உக்கிரம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது கருப்பர்களின் நீதிக்கான ஆர்ப்பாட்டம். ஆண்டாண்டு காலமாய்த் தாங்கள் நசுக்கப்படுவது பொறுக்காமல் மீண்டும் வெகுண்டெழுந்துள்ளார்கள் அம்மக்கள். மிக மிக முக்கியமானப் பிரச்சனையான இதை…

மேலும்...

பதுங்குக் குழியில் டொனால்ட் டரம்ப் – அமெரிக்காவில் அதிகரிக்கும் பதற்றம்!

வாஷிங்டன் (01 ஜூன் 2020): வெள்ளை மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் மாளிகையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அவர்களைத்…

மேலும்...

அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் – காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு!

நியூயார்க் (30 மே 2020): கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்ததை அடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார். ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் உயிரிழந்தாக கூறி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள், வங்கிகள், உணவகங்கள், காவல்நிலையம் என பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்….

மேலும்...

அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்!

வாஷிங்டன் (30 மே 2020): உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகம் முழுக்க நடைபெறும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக, ஐ.நா சபையின் கிளை அமைப்பாகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் உலக சுகாதார நிறுவனம். சுமார் 194 நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகத் தற்போது வரை இருக்கும் நிலையில், அமெரிக்கா தற்போது இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக…

மேலும்...

வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு!

வாஷிங்டன் (23 மே 2020): அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆளுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இதன்  பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. அதேவேளை அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவில் தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகளை உடனடியாக…

மேலும்...

கொரோனா ரணகளத்திலும் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் அக்கப்போர்!

வாஷிங்டன் (21 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது அமெரிக் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இம்மருந்தை பரிந்துரைக்கின்றன. இந்த மாத்திரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தியாவை மிரட்டி, லட்சக்கணக்கான மாத்திரைகளை அமெரிக்கா…

மேலும்...

அமெரிக்க நகரங்களில் ஒலிக்கும் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)

வாஷிங்டன் (26 ஏப் 2020): அமெரிக்காவில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) பல இடங்களில் ஒலிக்கிறது. அமெரிக்காவில் ஒலிப்பெருக்கி மூலம் பாங்கு சொல்ல பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இவ்வருட புனித ரமலான் மாதத்திற்காக அக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரின் மேயர் ஜேக்கப் பிரே, நகரின் அனைத்து பகுதிகளிலும் ரமலான் மாதத்தின் அனைத்து தினங்களிலும் ஐந்து வேளைக்கும் ஒலிப் பெருக்கி மூலம் பாங்கு அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா கொரோனாவால் அதிக…

மேலும்...

ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால்தான் அதிக உயிரிழப்பு – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!

வாஷிங்டன் (23 ஏப் 2020): கொரோனாவுக்கு வழங்கப்பட்ட ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால்தான் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இன்றளவும் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே போன்று தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு, இந்தியாவில் மலேரியாவுக்கு தருகிற ஹைட்ராக்சிகுளோராகுயின் மாத்திரைகள் நன்றாக வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்து ஏற்றுமதிக்கு…

மேலும்...

கொரோனா வைரஸ் (கோவிட் 19) பரவியது எப்படி? – அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டன் (18 ஏப் 2020): கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகானத்தின் ஆய்வகத்திலிருந்து தவறாக வெளியேறியதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் இதுவரை சீனாவின் வுகான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. சீன அரசும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவியதாகத் அறிவித்திருந்தது. இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச்…

மேலும்...