கொரோனா பரவலால் தடுமாறும் தமிழகம் – ஒரே நாளில் 6472 பேருக்கு கொரோனா தொற்று!

Share this News:

சென்னை (23 ஜூலை 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதில் 63 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 25 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,232 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,210 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,793 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 52,939 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.”

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply