விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல்!

சென்னை (06 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்த அவரது ட்வீட்டர் பதிவில், “நீர் பற்றாக்குறை மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக விவசாயிகள் பாதிப்படைவது ஒருபுறம் என்றால், இதுபோன்ற சட்டங்களாலும் விவசாயிகள் பாதிக்கபப்டுகின்றனர். என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் “விவசாய மசோதாவை எதிர்த்து விவசாயிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றை அடையாளமாக அவர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக அணிவகுத்துள்ளனர்.” என்று கார்த்தி கூறியுள்ளார்..

மேலும் “வேலை இல்லாமல் ஒரு நாளை கூட நகர்த்த முடியாத மக்கள் தங்களின் சொத்துக்கள், விளைநிலங்கள், பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை விட்டுவிட்டு டெல்லியில் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். கடுமையான குளிர் மற்றும் கோவிட் பயம் இருந்தபோதிலும் அவர்கள் ஒரு வாரமாக தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பது அவர்களின் எந்த அளவுக்கு நியாயமானது? என்பதை நாம் உணர வேண்டும்.” என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...