தோப்புக்கரணம் போட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

Share this News:

சேலம் (22 ஆக 2020): விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தோப்புக்கரணம் போட்டு விநாயகனை தரிசித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதூர்த்தியை கொண்டாடியுள்ளார்.

மேலும் பய பக்தியோடு விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு தரிசனம் செய்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply