ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

Share this News:

சென்னை (12 மார்ச் 2022): உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு ஒன்றிய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் வரவேற்றார்.

இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply