தமிழக அரசு மீது பாயும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

சென்னை (14 செப் 2020): நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அரியலூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மேலும் .நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்பாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதி கிருபாகரன் அமர்வில் விவாதிக்கப்பட்டது.. அப்போது, நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தாதலேயே மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருவதாகவும், தற்கொலைகளை தடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மாணவர்கள் தற்கொலைகளை அரசியல்வாதிகள் பெரிதுபடுத்தக் கூடாது எனவும், கூறிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஹாட் நியூஸ்: