சென்னை டிஜிபி அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Share this News:

சென்னை (06 மே 2020): சென்னை டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில், துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர், தொழில்நுட்ப பிரிவில் ஒருவர், உளவுத்துறை கட்டுப்பாட்டு அறையில் 2 பேர், மோட்டார் வாகன பிரிவில் ஒருவர் என 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் இன்று மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், டிஜிபி அலுவலகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.


Share this News: