டெல்லி வெற்றி திமுகவுக்கு உற்சாகம் – ஏன் தெரியுமா?

Share this News:

சென்னை (11 பிப் 2020): டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அசுர வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை உத்திகளை வகுத்து தரும் பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரஷாந்த் கிஷோர் பரப்புரை உத்திகளை வகுத்து தந்தார்.

இது இப்படியிருக்க திமுக பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளது. எனவே வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பிரசாந்த் கிசோரின் யுக்தி மேலும் வலு சேர்க்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.


Share this News:

Leave a Reply