சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (12 ஏப் 2021): சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இளைஞர்கள் மீது போலீசார் பதிவு செய்த எப் ஐ ஆரை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

ஜாபர் சாதிக் என்பவர் மீதும் ஒரு சில இளைஞர்கள் மீதும் சி ஏஏ போராட்டத்தின்போது பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்தியதாகவும் , சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் கன்னியாகுமரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் சாதிக் உள்ளிட்டவர்கள் மீது புகார் செய்தார்.

இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். ஹேமலதா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, போராட்டம் அமைதியான வழியில் நடந்ததாகவும், புகாரில் கூறப்பட்டுள்ளபடி எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்றும் கூறிய நீதிபதி, ஜாபர் சாதிக் உள்ளிட்ட இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...