எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

சென்னை (30 மே 2020): எழுத்தாளரும் தமிழறிஞருமான தமிழ் மாமணி அதிரை அஹமது அவர்கள் இன்று காலை காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் இன்று மரணமடைந்தார்கள் என்ற செய்தி கடும் துயரத்தை அளித்ததது.

தலைசிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்த அஹ்மது அவர்கள் வேலூர் பாக்கியத்துஸ் சாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்து அங்கு ஆலிம்கள் சிறந்த தமிழறிஞர்களாகவும் உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார்.

மார்க்க பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த அஹ்மது அவர்கள் சவூதி அரேபியாவில் பணியாற்றிய காலத்தில் அங்குள்ள தமிழக முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார்.

சிறந்த எழுத்தாளராக விளங்கிய அஹ்மது அவர்கள் பல்வேறு தலைப்புகளில் 38 நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹ்மது காக்கா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அந்த பெருந்தகையின் மரணம் தமிழுலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அல்லாஹ் அவர்களுக்கு மறுமையின் நற்பேறுகளை வழங்குவதற்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அழகிய பொறுமையை அளிப்பதற்கும் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...