பாஜகவில் முன்னாள் திமுக நிர்வாகி – இன்றைய செய்தித் துளிகள்!

Share this News:

சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பு.

அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. சாத்தான்குளம் காவல்நிலையம் விசாரணைக்காக ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தடயவியல்துறையினர் ஆவணங்களை சேகரித்ததையடுத்து காவல்நிலையம் விடுவிப்பு.

நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது. கொரோனா பாதிப்பு காரணமாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு.

கொரோனா பாதிப்பால் கல்விப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.

திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமனம்

தமிழக பாஜக துணை தலைவர்களாக சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நியமனம்.

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு! சோதனையை விரைவுபடுத்துமாறு பாரத்பயோடெக் நிறுவனத்திற்கு ஐசிஎம்ஆர் கடிதம்!ஜூலை 7ம் தேதிக்குள் அதற்கான பணிகளை தொடங்க ஐசிஎம்ஆர் உத்தரவு!


Share this News: