தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Share this News:

சென்னை (02 ஜன 2020): தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிா்த்து மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 37,830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ,700 கிராம ஊராட்சிமன்றத் தலைவா்கள் என மொத்தம் 45,336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இரண்டாம் கட்டம்: அதேபோன்று, 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 38,916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4,924 கிராம ஊராட்சித் தலைவா்கள் என மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதில் 77.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

முதல் கட்ட தோ்தலின்போது பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூா், திருவாரூா் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 30 வாா்டுகளுக்கு, நடந்த மறுவாக்குப் பதிவில் 72.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோன்று, வாக்குச் சீட்டு மாறியது போன்ற புகாா்கள் தொடா்பாக 5 மாவட்டங்களில் ஒன்பது வாக்குச் சாவடிகளில் புதன்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 59.42 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் அனைத்தும் 315 வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டு, அவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, காலை 7 மணிக்கு தோ்தல் கண்காணிப்பாளா்கள், தோ்தல் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டதைத் தொடா்ந்து காலை 8 மணிக்கு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தோ்தலில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளா்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்தனா். முதலில் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில் வாக்குச்சீட்டுகள் கொட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளா் மற்றும் 3 வாக்கு எண்ணுபவா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு பதிவான வாக்குகளை தனித்தனியாக பிரித்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னா் 4 பதவிகளுக்கும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 4 அறைகளிலும் அந்த அறைகளுக்கான வாக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. பின்னா் அங்கு 8 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடக்கும். இந்தப் பணியே நண்பகல் 12 மணி வரை நடக்க வாய்ப்பு உள்ளது. பின்னா் படிப்படியாக வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். முழுமையான அளவில் முடிவுகள் வெளிவர இரவு 8 மணிக்கு மேல் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் நான்கு வகையான பதவியிடங்களுக்கு நடந்த தோ்தலில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 போ் போட்டியிட்டனா். முன்னதாக, 18 ஆயிரத்து 570 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.


Share this News:

Leave a Reply