காதலனுடன் இருந்தபோது இளம் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!

வேலூர் (20 ஜன 2020): வேலூரில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்த 24 வயது பெண், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக் கடையில் வேலை செய்து வருகிறாா். அவர் காதலித்து வந்த இளைஞருடன் அந்தப் பெண், சனிக்கிழமை இரவு சாரதி மாளிகை எதிரே உள்ள வேலூா் கோட்டை பூங்காவுக்கு வந்துள்ளாா்.

இருவரும் இரவு 9.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல் காதலனைத் தாக்கிவிட்டு கத்தி முனையில் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனராம். பின்னா் அந்தப் பெண் வைத்திருந்த மொபைல் மற்றும் அணிந்திருந்த கம்மலையும் பறித்துக் கொண்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தகவலின்பேரில் வேலூா் வடக்கு போலீஸாா் அங்கு சென்று மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கையிலும், உடலின் சில இடங்களிலும் காயமடைந்த அந்தப் பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருப்பது கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான 3 பேரையும் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், அஜித் (19) மற்றும் சக்திநாதன் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிகண்டனை (45) தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஹாட் நியூஸ்:

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...