காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிதியுதவி!

Share this News:

சென்னை (19 ஆக 2020): தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், மேடைப் பேச்சாளருமான வாய்ச்சவடால்’ குருசாமிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

78 வயதான வாய்ச்சவடால்’ குருசாமி, முதுமையின் காரணமாக உடல்நல பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாத அவரது தற்போதைய நிலையை, அவர் வசித்துவரும் சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

உடனே அவரது வீட்டுக்கு சென்ற அமைச்சர் குருசாமியை சந்தித்து உடல்நலம் விசாரித்ததோடு, அவருக்கு ரூ 1 லட்சம் நிதியும் வழங்கினார்.


Share this News:

Leave a Reply