ரஜினியும் கமலும் இணைய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

Share this News:

புதுடெல்லி (02 மார்ச் 2020): நடிகர் ரஜினியும் கமலும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்ளின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, ரஜினி – கமல் இணைந்து நடிப்பார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம் ரஜினி – கமல் இணைந்தால் 16 வயதினிலே மாதிரி ஒரு நல்ல படம் கிடைக்கலாம் என கிண்டலுடன் தெரிவித்தார்.

சமீபத்தில், டெல்லி சம்பவம் குறித்து பேசிய ரஜினி மத்திய அரசை சாடி பேசியதும், அதற்கு ஆதரவாக கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டிப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply