சிகிச்சை செய்வதாகக் கூறி நண்பனின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது!

ஆம்பூர் (11 மார்ச் 2022): நண்பனின் மனைவிக்கு மாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாகக் கூறி நண்பனின் மனைவியிடம் அத்துமீறியவர் கைது செய்யப்படுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் சல்மான். இவர் காலனி தொழிற்சாலையில் பணி செய்துவருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சல்மானின் மனைவிக்கு கடந்த சில தினங்களாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் சல்மானின் நெருங்கிய நண்பரான துத்திபட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஷபிக் என்பவரை மாந்திரீகம் மற்றும் பிரார்த்தனை செய்வதற்காக சல்மான் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சல்மான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது வீட்டுக்குச் சென்ற ஷபிக் சல்மானின் மனைவியிடம் மாந்திரீக பூஜை செய்வதாகக் கூறி தகாத முறையில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது சல்மானின் மனைவி மஹபூப் கூச்சலிட்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து நடந்த சம்பவத்தை கணவருக்கு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஷபிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைத்தனர்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...