திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் – மனித நேய மக்கள் கட்சி செயற்குழு தீர்மானம்!

சென்னை (22 டிச 2020): வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியை வெற்றியடைய செய்வதற்கு அயராது பாடுபடுவோம் என்று தலைமை செயற்குழு தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து மமக செயற்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு அடிமைச் சேவகம் செய்து மாநிலங்களின் உரிமைகளை காவு கொடுத்து வருகின்றது. அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது.

தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும், தமிழக மக்களின் நலன்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கும் நல்லாட்சியை தமிழகத்தில் மலர வைப்பது காலத்தின் கட்டாயமாகும். எனவே வரும் 2021ல் தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை 200 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றிபெற வைப்பதற்காக அயராமல் களப்பணியாற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...