சென்னை மைசூர் வந்தேபாரத் ரெயில் மீது கன்றுகுட்டி மோதி ரெயில் பழுது!

சென்னை (18 நவ 2022): மைசூரு- பெங்களூரு-சென்னை வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் பழுதடைந்தது. இந்த விபத்தில் கன்றுக்குட்டி உயிரிழந்தது.

விபத்து ஏற்பட்ட போது ரயில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்ட ரயில், மீண்டும் சென்னைக்கு பயணத்தை துவங்கியது.

இதுகுறித்து தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏ ஏழுமலை கூறுகையில் “கன்றுக்குட்டியின் உரிமையாளரைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்து கடும் அபராதம் விதிக்க யோசித்து வருகிறோம். , பாதையில் கால்நடைகளை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மக்களை எச்சரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

ஏற்கனவே அகமதாபாத்தில் வந்தேபாரத் விரைவு ரயில் எருமைகள் மீது மோதிய விபத்தில் எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...