ஒருவழியாக விலை குறைந்தது!

சென்னை (28 ஜன 2020): வெங்காயத்தின் விலை ஒருவழியாக குறைந்து வருகிறது.

சமீபத்தில் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்துக்கு சென்றதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ஒரு கிலோ 200 ரூபாய் வரை அதிகரித்து பொதுமக்களை அதிகம் அவதிக்குள்ளாக்கியது.

இதனால், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்தது.

இதனைத்தொடர்ந்து, வெங்காயம் விலை சற்று குறைய தொடங்கியது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் வரவு தற்போது அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை குறைய தொடங்கி உள்ளது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. இதனால், இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...