ஏழை தாயின் மகனுக்கு ஏழைகள் குறித்து தெரியாதது வேடிக்கை – மோடி மீது ஸ்டாலின் தாக்கு!

சென்னை (07 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நியாயமானவை என்றும் விவசாய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அனைத்து எதிர் கட்சிகள் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டதில் திமுகவின் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட.ன. இதில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் டிசம்பர் 8 விவசாயிகளின் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய ஸ்டாலின், விவசாயிகளின் போராட்டம் நியாயமானது., அவர்கள் வெற்றியுடனேயே போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வருவார்கள் . எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் மோடி அரசு புதிய சட்டங்களை கொண்டு வருவது ஆபத்தானது.

தான் ஒரு ஏழை தாயின் மகன் என்ற மோடியின் கூற்றையும் கேலி செய்த ஸ்டாலின், “ஒரு ஏழை தாயின் மகன் என்பதால், நீங்கள் மற்ற ஏழைக் குழந்தைகளை (விவசாயிகள்) மீது வன்மம் கொள்வது நியாயமா?” என்று கூறினார். மான் கி பாத் உரையில் வாக்குறுதியளிக்கப்பட்ட பொருட்களுக்கான குறைந்தபட்ச விலைக்கு விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

எடப்பாடி அரசையும் சாடிய ஸ்டாலின். முதலமைச்சர் பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று முன்னிலைப்படுத்திக் கொண்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருவதாக ஸ்டாலின் கூறினார்.

இதற்கிடையில், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் டிசம்பர் 8 விவசாயிகளின் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல காங்கிரஸ், சிபிஐ (எம்), திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி கட்சி மற்றும் டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளும் விவசாயிகளின் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...