கள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் – சிக்கிய கொள்ளைக்காரன்!

Share this News:

தஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவனும், கள்ளக் காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவனுமான ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சையை அடுத்துள்ள பகுதி வல்லம். இங்குள்ள சுற்று வட்டாரங்களில் நிறைய வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன.

தஞ்சை பகுதியில் காலேஜில் படிக்கும் மாணவிகள், தங்களது காதலனை அழைத்துக்கொண்டு இந்த பகுதிக்கு வந்து ஜாலியாக இருந்துவிட்டு போவார்களாம். தனிமையான காட்டுப்பகுதி இடம் இது.. அதனால், இங்கு வரும் கள்ளக்காதல் ஜோடிகள், காதலர்களை, காத்திருந்து ரமேஷ் அவர்களை மடக்கி மிரட்டுவானாம். பிறகு இளம் பெண்களையும் மிரட்டி, காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விடுவானாம்.

இது சம்பந்தமாக நிறைய புகார்கள் போலீசுக்கு சென்று கொண்டே இருந்தது. போலீசாரும் 2 வருடமாக இந்த கொள்ளையை நடத்துவது யார்என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இறுதியில் தொடர்ந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது . தஞ்சை மானோஜி பட்டியை சேர்ந்த ரமேஷ் என்று தெரிய வந்தது.

27 வயதாகும் ரமேஷ்தான் இதுவரை 2 வருடமாக நடந்து வந்த எல்லா கொள்ளைக்கும் காரணம் என விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ரமேஷுடன் மொத்தம் 3 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளைகளில் ஈடுபட்டது இதற்கு ரமேஷ்தான் தலைவன் என்றும் தெரிய வந்தது.

இவர்களது நேரம் இரவு 7 மணி முதல் 10 மணி வரையாம். பைபாஸ் ரோட்டில் போய் இந்த நேரத்தில் நின்று கொள்வார்களாம். அந்த பக்கமாக வருபவர்களை தாக்கி பணம், நகை கொள்ளை அடிப்பார்களாம். தற்போது ரமேஷ் மட்டும்சிக்கி உள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Share this News:

Leave a Reply