மதுரை(28 ஜூன் 2022): அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் க்கும் இபிஎஸ் க்கும் இடையே ஒற்றை தலைமை போட்டி நிலவி வருகிறது. இது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏறப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இபிஎஸ் இன் ஒற்றை தலைமை முயற்சிக்கு எதிராக ஒபிஎஸ் தேர்தல் ஆணையத்தை நடியுள்ளார்.
இதற்கிடையே ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி, கேபிமுனுசாமி,ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் என கூறப்பட்டுள்ளது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.