மெழுகு வர்த்தியுடன் வீதிக்கு வந்த ரஜினி!

Share this News:

சென்னை ( 05 ஏப் 2020): உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் முக்கிய நகரங்களில் மக்கள் தீபங்களை ஏற்றினர். தமிழகத்திலும் பல இடங்களில் வீடுகளில் தீபம் ஏற்றப்பட்டது.

தமிழகத்திலும் பல வீடுகளில் ஒளி ஏற்றினர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளில் மக்கள் தீப ஒளி ஏற்றினர். நெல்லை, தஞ்சை, நாகை, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பல வீடுகளில் தீபம் ஏற்றப்பட்டது.அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓபிஎஸ் இல்லங்களிலும் அகல் விளக்குகளில் ஒளி ஏற்றினார்.

அதுமட்டுமல்லாமல் பிரதமரின் வலியுறுத்தல்படி சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் நாடு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீட்டின் விளக்குகளை அணைத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வீடெங்கிலும்ஒளியை ஏற்றினர். நடிகர் ரஜினிகாந்த்தும் சென்னை போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு மெழுகுவர்த்தியை ஏற்றினார்.


Share this News:

Leave a Reply