குர்ஆன் குறித்து பரங்கிப்பேட்டை பத்தாம் வகுப்பு மாணவி எழுதிய ஆங்கில நூல் வெளியீடு!

Share this News:

பரங்கிப்பேட்டை (26 டிச 2022): பரங்கிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி அமீரா (த/பெ) பாரூக் எழுதிய Scientific facts in Islam என்னும் ஆங்கில நூல் கடந்த 24.12.2022 சனிக்கிழமை அன்று புதுச்சேரி, லாஸ்பெட்டில் உள்ள விவேகானந்தா பள்ளியில் புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

பரங்கிப்பேட்டை மாணவி செல்வி. அமீரா ஃபாருக் என்பவர் 10ஆம் வகுப்பு படிக்குபோது ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் கொரோனோ காரணமாக இரண்டு வருடங்கள் பதிப்பிக்க இயலாமல் இருந்தது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதே மாணவி ஆறாம் வகுப்பு பயிலும்போது நடைபெற்ற கட்டுரை போட்டியில் Darwin’s theory of evolution in Galapagos island என்ற தலைப்பில் சிறப்பு கட்டுரை ஒன்றினை ஆங்கிலத்தில் எழுதி ரூ.5000 பரிசு பெற்றுள்ளார் என்பதும் குறிக்கத்தக்கது.

குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய மாணவி செல்வி அமீரா பாரூக் Way to Rayyan என்ற இஸ்லாமிய வழிகாட்டி மையம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகிறார் என்பதும் சொல்லத்தக்கது.

குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தலைவர் கலைமாமணி. முனைவர் அ. உசேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்புமிக்க விழாவில் மேனாள். சட்டப்பேரவை தலைவரும், புதுவை கம்பன் கலையரங்கத்தின் செயலருமான திரு. வெ.பொ சிவக்கொழுந்து அவர்கள் நூலின் முதல் பிரதியை வெளியிட, எழுத்தாளரின் பாட்டனார் ஜனாப். U. நஜீர் உபைதுல்லாஹ் பெற்றுக்கொண்டார்.

நூலாசிரியர் செல்வி அமீரா பாரூக் மேடையில் உடனிருந்தார். இம்மாணவி பரங்கிப்பேட்டை பெரும்புலவர் என்று பிரசித்தி பெற்ற காதர் அலி மரைக்காயர் வழித்தோன்றல் ஆவார்.


Share this News:

Leave a Reply