தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் – யாருக்கு எந்தெந்த துறை?

சென்னை (07 டிச 2022): தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப் போவதாக பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்துள்ளவர்களுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதிலும் அதிருப்தி நிலவுகிறது. அவர்களையும் திருப்திபடுத்த வேண்டிய சூழலில் கட்சித் தலைமை உள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் இரண்டாவது முறையாக திமுக தலைவர் ஸ்டாலினால் நியமனம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும் சிறப்பாக செயல்படும் பல எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. சில இலாக்களின் செயல்படாத அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அமைச்சர் பதவியில் அதிருப்தியில் இருக்கும் ஐ.பெரியசாமியின் துறையும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சிவி கணேசன், மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், சக்கரபாணி உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரின் துறைகளிலும் மாற்றம் இருக்கும் எனவும் அமைச்சரவை மாற்றத்திற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த பட்டியலானது வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....