இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் உயிரை காப்பாற்றிய தமுமுகவினர்!

Share this News:

திருப்பூர் (19 மே 2020): திருப்பூரில் மாமனாரால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிமாறனை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகியை வெட்டிய மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் அருகேயுள்ள, பெருமாநல்லூர் பகுதியை சேர்த்தவர் மணிமாறன். இவர் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் மணிமாறனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மணிமாறனின் தந்தை தண்டபானி மணிமாறனை தட்டிக் கேட்டுள்ளார்.இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி மணிமாறணை மாமனார் தண்டபானி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மணிமாறன் படு காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார்.

தகவலறிந்த தமுமுக நிர்வாகிகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மணிமாறனை உரிய நேரத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் மணிமாறன் உயிர் காப்பாற்றப்பட்டது.

மேலும் இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தண்டபானியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமுமுகவினரின் செயல் அப்பகுதியில் பாராட்டை பெற்றுள்ளது. இதுபோல பலமுறை தமுமுகவின் ஆம்புலன்ஸ் சாதி மத பேதமின்றி பலருக்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News: