தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு!

Share this News:

சென்னை (10 ஜன 2020): குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கையுடன் தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இதனை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.

இதன் பின்பு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, “முதல்வரை சந்தித்து இது முஸ்லிம்களுக்கான பிரச்சனை மட்டும் அல்ல ஒட்டு மொத்த மக்களுக்கான பிரச்சனை என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

அப்போது கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத்,மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர்கள் மௌலானா மன்சூர் காஷிபி,பஷீர் அஹமத்,முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர்,MLA,, முன்னாள் அதிமுக எம்பி அன்வர் ராஜா, பாப்புலர் ஃப்ரெண்ட் தமிழக தலைவர் முஹம்மது இஸ்மாயில் மற்றும் கூட்டமைப்பில் உள்ள இஸ்லாமிய அமைப்பு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.


Share this News:

Leave a Reply