இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பைப் பரப்பும் வாட்ஸ் அப் – அதிர வைக்கும் புள்ளி விவரம்!

வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருக்கின்றன என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 2018-ல் இருந்து ஆகஸ்ட் 2019-வரை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை Fear Speech, Normal என இருவகைகளாகப் பிரித்துள்ளனர். இதில் வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான Fear Speech வகை குறுஞ்செய்திகள், சாதாரண குறுஞ்செய்திகளை விட அதிகம் ‘Forward’ செய்யப்படுவதாகவும் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக இஸ்லாம் மற்றும் இஸ்லாம் மக்கள் மீதான வெறுப்பை, பயத்தை விதைப்பது போலவே பெரும்பாலான Fear Speech குறுஞ்செய்திகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழுக்களில் இருக்கும் 10 சதவிகித பயனர்கள் மட்டுமே இதுபோன்ற இஸ்லாமோஃபோபியா குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இவர்களின் முக்கிய நோக்கமே இஸ்லாம் மக்கள் மீதான வெறுப்பையும், பயத்தையும் அதிகரிப்பது மட்டுமே. மற்ற தளங்களை விட வாட்ஸ்அப்பே இதுபோன்ற பரப்புரைகளுக்கான முக்கியத் தளமாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரப்படும் தகவல்கள் ‘Content Moderation’ மூலம் வடிகட்டப்பட்டு விடும். ஆனால், வாட்ஸ்அப்பில் அது போன்ற செயல்முறைகள் எதுவும் கிடையாது என்பதால், ஒருவர் பகிரும் தகவல் எந்த மாற்றமும் தடையும் இன்றி சென்றடைகிறது. எனவேதான் இது போன்ற பரப்புரைகளுக்கு வாட்ஸ்அப் முக்கியத் தளமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

நன்றி: விகடன்

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...