ஆணாக மாறிய பெண் – நண்பியை மணந்ததால் அதிர்ச்சி!

Share this News:

திருப்பூர் (13 டிச 2021): ஆணாக மாறிய பெண் ஒருவர் அவரது நண்பியை மணந்ததால் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த, 21 வயது பெண், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஒத்த வயதுடைய இன்னொரு பெண் அவருடன் வேலை செய்து வந்தார், இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பழகி வந்தனர்.

இந்நிலையில், இரண்டு பெண்களில் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் ஒருவகை மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதன்பின்னர் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு தன்னை திருநம்பியாக மாற்றிக் கொண்டார்.

திருநம்பியாக மாற்றிக் கொண்டதை அடுத்து நட்பாக பழகி வந்த தோழிகள் இருவரும் கேரளாவில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் திருநம்பியை திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மகளை மீட்டு வர முயற்சி செய்தனர்.

இதையடுத்து பெற்றோர் தேடுவதை அறிந்த இருவரும் திருப்பூர் தெற்கு போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply