ஜார்ஜியா (11 ஜூன் 2019): இனி குழைந்தை பிறக்காமல் இருக்க காண்டம், மாத்திரைகளுக்கு பதிலாக மோதிரம் போன்ற பொருள் உபயோகத்திற்கு வருகிறது.
ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெண்களுக்காக கருத்தடை ஹார்மோன்கள் கலந்த கம்மல், மோதிரம், வாட்ச், நெக்லஸ் ஆகிய அணிகலன்களை வடிவமைத்துள்ளனர். அவற்றை அணிந்து கொள்ளவதால் அவை தோல் வழியாக ரத்தத்தில் ஊடுருவி கருத்தரிக்காமல் தடுக்கும்.
அவர்கள் தயாரித்துள்ள நகை ஒரிரு நாட்கள் மட்டுமே ஹார்மோன்களை ரத்தத்தில் சேர்த்து கருத்தடையை செய்யும், அதன் பின் செயல் இழந்துவிடும். தற்போது இதை அதிக நாட்கள் கணக்கில் பயன்பாட்டில் இருக்க செய்ய ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.